Showing posts with label கச்சேரி. Show all posts
Showing posts with label கச்சேரி. Show all posts

Sunday, June 21, 2020

You have to give me your Mrudangam

Sharing an article from Kalki dated 16-12-1984 by Chaarukesi that I felt blessed to have come across. I read the article with utmost reverence as it is none other than the Mrudangam Maestro Legendary Percussionist Ramanathapuram Sri. C.S.Murugabhoopathi sir who speaks about Umayalapuram Sri K.Sivaraman Sir as UKS Sir receives the “Sangeetha Kalasikaamani'' award from the Indian Fine Arts Society. Reading this article makes me delve deep in guru smaraNai. What more can I want on world music and yoga day! Photographs of the original article have been attached. Here is the translation:

You have to give me your mrudangam

“Sivaraman’s style of playing is one that conforms to discipline. His playing contains many nuances and intricacies. Sivaraman is one who wishes to incorporate creativity and novel ideas in his performances. It is befitting that the Indian Fine Arts Society is conferring the title of “Sangeetha Kalasikaamani” upon Umayalapuram Sivaraman, who is one of the foremost musicians and performers of our art today. 

I have listened to his accompaniment for G.N.B. in many concerts. I have only known him as a disciple of Palakkad Mani Iyer. Sivaraman continues to uphold the reputation of his Guru with great dignity. It is very heartening to see an artiste play superlatively and attain such heights and honours in the field of music alongside his high academic accomplishments. 

He has always shown great interest in exploring the artform innovatively, without departing from the boundaries of its traditional construct. A few years ago, he, along with some of his scientist friends developed the fibre-glass mridangam with which he performed concerts (https://www.facebook.com/615920434/posts/10158061520225435/ ). Recently he presented a series of lecture-demonstrations that will help even a lay-man understand the beauty and nuances of playing the mrudangam. All these initiatives play a major role in generating keen interest and appreciation for the art of mrudangam among listeners.

With respect to my art and my performances, he earnestly listens to the intricacies that I present. Let me recall a small anecdote to show his true enthusiasm when it comes to acquiring knowledge.
Once he willingly organized a concert of M.D.Ramanathan at Thiagaraja Sangeetha Vidwath Samajam in Mylapore. He insisted that I played for that particular concert. Although I suggested that some other artiste be arranged, Sivaraman was persistent and ultimately I did play that concert. As I played a special variety on the thoppi (left side drumhead), he stood nearby observing and enjoying my performance. 

On a later occasion he even requested me and took a mrudangam of mine. I even asked him, “When you have so many mrudangams of your own, why would you want one of mine?”
“No No! You have to please give me!” he said and selected one of my mrudangams and he performed on it. Apart from exhibiting his prowess and calibre in his own instrument, I could see his zeal and involvement in comprehending the artistry of vidhvans he admired and in understanding the characteristic features of their instruments. When four different atristes play on the same mrudangam -  it will result in four varying tonal qualities. I could perceive Sivaraman’s sincerity in his pursuit of realising the nature and aspects of all types of mrudangams. 

  • Ramanathapuram C.S.Murugapathy 





Saturday, February 6, 2010

நைஜீரியா - 4


சீக்கிரம் வேலைகளை முடித்துக்கொண்டு இன்று நைஜீரியா-4 -ஐ முடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாலு மணிக்கு தொலைபேசியில் நல்ல புகைப்படம் வேண்டும் வெள்ளை பின்புலம் இருத்தல் நலம் என்று தகவல் வந்தது. தகவல் என்று தட்டியதும், இன்று வெள்ளிக்கிழமை; பெரியவா சொன்னது போல் விநாயகர் அகவல் சொல்லவிலையே என்று ஞாபகம் வருகிறது. ஒரு ஐந்து நிமிடம் இருங்கள்...

------------------------------------------


நன்றி.

கிருஷ்ணாவிற்கு தொலைபேசி, அவன் வந்ததும் முயன்றதில் (மனதில் தான் எப்பேர்ப்பட்ட தில்), சற்று காமெடியாக இருந்தன படங்கள். குட்டி சிஷ்யன் பிரணவ் குறுக்கும் நெடுக்கும் நடந்ததில் சுவற்றில் கட்டியிருந்த வேஷ்டி விழுந்துவிடும் போல இருந்தது.

அவிழ்ந்தால் எப்போதும்
கவலை தான், எங்கிருந்தாலும்
வேஷ்டி.

சிறிய அறைகளில் படம் எடுக்கும்பொழுது, கண்களால் லென்சை நேர் பார்வை பார்த்தால், இரண்டில் அரை  குறையும். அதைத் தவிர்க்க வேறு இடங்களைப் பார்த்தபடி எடுத்த படங்கள் நன்றாயில்லை. இதற்கிடையில், ஏழு மணி net -class -க்கு வைத்திருந்த reminder இடையிடையே குரல் கொடுக்க, ஒவ்வொருமுறையும் படத்தின் குறுக்கே ப்ரணவின் நீட்டிய கையும் அதில் பற்றியிருந்த அலைபேசியும் தெரிந்தது!

ஏழு மணிக்கு, ஃபிரான்ஸ் மகேன் தேவராஜனுக்கு ஸ்கைப்பில் ஹாய் சொல்லியதும் மின்சாரம் நின்று போய், எட்டரை மணிக்குத்தான் வந்தது. இன்று எழுத இயலாது என்று நினைத்தபடி, அயோத்யா மண்டபம் வரை சென்றபோது, சூர்யப்ரகாஷ் கச்சேரியில், ஸ்ரீமுஷ்ணம் ராஜ ராவ் மாமா தனி வாசித்துக் கொண்டிருந்தார். பக்கத்து கடையில் ஆனந்த விகடன் வாங்கியதும், எழுதத் தோன்றி விட்டது. இரண்டு சேனல்களிடையே முரண்பாடு வரும், ஆச்சிரியமில்லை. நான் கூட (96 -97 வருடங்களில்) சன் டிவியின் midnight   மசாலாவில் மட்டும் வரும் பாடல்களை, ராஜ் டிவியில் பகல் வேளைகளில் பார்த்திருக்கிறேன்!! ஆனால், விகடனின்  கடைசிப் பக்க கிசு கிசுவில் சானியாவின் திருமணம் நடைபெறாததின் காரணம், ஒரு(?) நடிகருடன் காதல் என்று போட்டுவிட்டு, உள்ளே inbox செய்திகளில் கல்யாணத்திற்குப் பிறகு டென்னிஸ் விளையாடத் தடை என்று சானியாவின் would be மாமனார் சொன்னது தான் காரணம் என்று எழுதியிருந்தார்கள்!

உபகதைகள் போதும்.



அந்த ஞாயிறு பரபரப்புகள் ஏதுமின்றி, சாதரணமாய் புலர்ந்தது. சென்னையில் இருந்திருந்தால் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை சீக்கிரமே ம்யூசிக் அகாடமியில் class எடுக்கச்  சென்றுவிடுவேன். அன்றைக்கு மதியம் அவியல் செய்வாள் ஆலிஸ் என்று சிவராமன் கூறினார். முன்தினமே அதற்குண்டான காய்கறிகள் வாங்கியிருந்தார். நம் மொழி தவிர அனைத்தும் அந்த வேலையாட்களுக்குத் தெரியும் என்றார்.   

Bankers Hall செல்லும் வழியில் சிக்னலில் எல்லாம் ஏதேனும் விற்றுக்கொண்டிருந்தார்கள். வாழைப் பழம், செய்தித் தாள்... ஏதாவது. "வாட்ச் எல்லாம் விப்பான், முன்னூறு ரூபாய்க்கு பாக்க நன்னாயிருக்கும், அதிஷ்டம் இருந்தா, ரெண்டு வருஷம் கூட ஓடும் இல்லாட்டி 5 ,6 மாசம்" என்று மணி சொல்லியிருந்தார்.

இரண்டு பேர் சக்கரம் வைத்த பலகையில் அமர்ந்து பிச்சை கேட்டபடியிருந்தார்கள். பெட்ரோல் பங்க்குகள் அனைத்திலும் பெரிய க்யூ இருந்தது. "இங்கயே பெட்ரோல் எடுக்கறா... இருபத்திரண்டு ரூபா தான்...
வெலை ஏத்தணும்னு பாக்கறான்... ஜனங்க விடமாட்டா.... அதனால, செயற்கையா ஒரு டிமாண்ட் க்ரியேட் பண்ணி, பெட்ரோல் வாங்கறது பெரிய பாடு.. க்யூல நிக்கணும், எங்க போனாலும் லேட் ஆகறது, அளவா தான் தரான்னு ஜனங்க ஸ்ரமப்பட்டுட்டா, வெலைய ஏத்திவுட்டுட்டு தாராளமா பெட்ரோலக்  குடுத்தா, இப்போ நிம்மதியா இருக்குன்னு வாய மூடிண்டு வாங்கீண்டு போவான்.. அதான் இப்படி..."





நிறைய கூட்டமிருந்தது. நீளமான வரிசைகள். ஒருவர் செய்தால் போதுமென்ற வேலையில் இருவர் அல்லது மூவர்.  ஒழுங்கற்ற ஒரு பெருங்கூட்டமும் முறையற்ற ஆட்சியும்...  "Building a stronger Nigeria..." என்று எழுதியிருந்த ஒரு பஸ் கடந்து போனது.

ஹால் நிறைந்த இரசிகர்கள். அமெரிக்கா போல் அடிக்கடி கச்சேரிகள் நடைபெறாததால், ஒவ்வொருவர் மனத்திலும் தனக்குப் பிடித்த ஒரு பாடலாவது இருக்கவேண்டும் என்ற தவிப்பு, என் மொழியில் ஏதுமுண்டா என்ற எதிர்பார்ப்பு,தென்னிந்திய முகங்களின் நடுவே, ஆங்காங்கே தெரிந்த வட இந்தியர்கள், சில நைஜீரியர்கள் என அனைவருக்கும் பிடித்தமானதாய் ஆனது மூன்றே கால் மணி நேரம் நடந்த அக்கச்சேரி. காகிதம் இல்லாததால், தான் விருப்பப் பாடலை செல்ஃபோனில் மெசேஜ் பகுதியில் எழுதி அதை ஒருவரிடம் கொடுத்து, எங்களிடம் காண்பிக்கச் சொன்னார் ஒரு ரசிகர், "ஸ்ஸாமஜ வர கமனா..."

 


அங்கிருந்து கம்பர்லேண்ட் என்ற உணவு விடுதியில் மிகுந்த கொட்டமடித்தோம். ஜோக்குகள் உணவு மேஜையின் இருமருங்கும் ஓடின. எங்களை அழைத்திருந்த ஃபைன் ஆர்ட்ஸின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கொரு பாட்டை பாட வேண்டும் என்று விளையாடினோம்.  காலங்களில் அவள் வசந்தம் பாடினார் சிவஸ்வாமி. அந்த சந்திப்பில், அவர்களுக்கே தெரியாமல் பல உறவுகள் இருந்தன. நெல்லை மண், ஒரே பள்ளி, தூரத்து உறவு, ஒரே கல்லூரி-விருப்பப் பாடம் என்று அங்கே ஒரு இனிய சங்கமம் நடந்தது. அங்கே இருந்தபடி, இத்தனை நாட்கள் தெரியவில்லையே என்று ஆச்சிரியம் கொண்டபடி, இன்னும் நெருங்கியவர்களாய் ஆனார்கள். சீதாராமன் சாரிடம் சென்னையில் CA படித்த  கதைகள் ஆனந்தமாய் விவாதிக்கப்பட்டன. இராஜாராமனும் சிவாவும் பஜனை சம்ப்ரதாயத்திலிருந்து இரு உருப்படிகள் பாடினர். பூர்ணஸ்ரீ, மோகன கல்யாணி தில்லானாவை கொஞ்சம் ஆடி காட்டினார்.

"நீங்க இந்த டிசம்பர் 22 அடையார் ஹம்சத்வநில ஷங்கர் ரமணிக்கு வாசிச்சேளா...  என் பையன் விக்னேஷ் சொல்லீண்டே இருந்தான், இந்த அங்க்கிள நாம பாத்திருக்கோம்னு... அப்புறம் சொன்னான், அங்க பார்த்தோம்னு... அன்னிக்கு, உங்க கச்சேரிக்கு அப்புறம் என்னோட டான்ஸ் தான் இருந்தது. அப்புறம் தான் எனக்கும் ஞாபகம் வந்துது. நான் ஷங்கரோட sister -in -law..."






Fanta-வையும் Sprite-ஐயும் கலந்து வெள்ளரித் துண்டும் எலுமிச்சையும் சேர்த்து, chapman என்று ஒரு நைஜீரியக் கோக் அருந்தினோம். பயப்படாமல் குடிக்கலாம், ஆல்கஹால் ஏதும் இல்லை என்று சொன்னார்கள். இரண்டு வாய் அருந்தியதும் ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டது. இங்கே, வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.  திங்களன்று மதியம் விடைபெறும்போது வருத்தமாயிருந்தது. நரேன் வழியனுப்பி வைத்தார். எல்லோரும் ஃபோனில் பேசினார்கள்.

மீண்டுமொரு நீண்ட பயணத்திற்கு பின் சென்னை வந்தடைந்து, உடனே நாகர்கோவில் அருகே பூதப்பாண்டியில் இரண்டு நாட்கள் கச்சேரி முடித்து, இப்போது Back To Routine, ஆஃப்ரிக்கா என்ற தேசத்தின் எல்லா இடங்களையும் பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன்.

Friday, February 5, 2010

நைஜீரியா - 3

ஆலிசையும் கம்ஃபோர்ட்டையும், புகைப்படம் எடுத்துக்கொள்ளட்டுமா என்றதும் மிகவும் வெட்கப்பட்டார்கள். அருகில் உள்ள வீட்டில் வேலை செய்பவள், கிணற்றை பார்த்த குழந்தை போல பால்கனியிலிருந்து கீழே துப்பினாள். கிராமப் பழக்கம் என்று நினைத்தேன்; ஆனால், மறுநாள் ஒரு கம்பெனி எக்சிக்யூடிவ் போலிருந்தவளும்  நடந்து கொண்டே உமிழ்ந்தாள். ஆண்கள் தெருவில் சுவரோரம் சிறுநீர் கழிப்பதும் நடந்தது. அதிலும் சிலர் சுவற்றைப் பார்க்காமல் சாலையின் பக்கமாகவே திரும்பி.... கவைப்படாமல் காரியம் செய்தனர். சென்னையின் மக்கள் பரவாயில்லை. 

தெருவோரம் ஒரு டயர் மேல் அமர்ந்து முடி வெட்டுதலும் பார்த்தேன். வண்ணங்களைக் கொண்டாடுவதைப் போலவே, கருப்பின் மீதுள்ள வெறுப்பினாலோ என்னமோ, முடியைப் பாடு படுத்திக்கொண்டிருந்தனர். 
  


 மறுநாள் எல்லோரும் அங்கிருக்கும் ஷீரடி கோவிலுக்குச் சென்றனர். நான் காலடி எண்ணிக் களிப்புறுபவன் என்பதால் வாழ்க சீரடியாரெல்லாம் என்று இருந்துவிட்டேன். வீல் சேர் வராதது ஒரு காரணம். ஆலிஸ், குழந்தைகள் படிக்கின்றன, நான் பள்ளிக் கல்வி கற்றேன் என்றாள். ரெகே ம்யூசிக் தான் அவர்களின் இசை என்றாள். எனக்கு பாடிக்காட்டுகிறாயா என்றதும் முகம் சிவந்தாள். வீல் சேர் பதினொரு மணிக்கு மேல் வந்தது. அதற்குள் கோவிலில் இருந்து அனைவரும் திரும்பியிருந்தார்கள். அங்கிருந்து கிளம்பிச் சென்று அவ்வூரின் அடையாளமாக (yoruba) mask வாங்கிவரலாம் என்று கிளம்பினோம்.


 



வாழ்க சீர் அடியார் என்று, ஆறிரு தடந்தோள் நினைவில் ஆடியதும் சந்தித்த வேல், இம்மானுவேல். அவர்தான் pajero -வை ஓட்டினார். அதன் இருக்கைகள் மிக உயரத்தில் இருந்தன, எப்படி ஏறப்போகிறோம் என்றும் மலைத்தேன். "எம்மானுவல்.... ஹெல்ப் மாஸ்டர்..." என்று சிவராமன் மாமாவின் குரல் கேட்ட அடுத்த நொடி, பலமான இரு கைகள் என் இடையைப் பற்றி, இருக்கையில் அமர்வித்தன. வழியில் சிவராமன், "இம்மானுவேலுக்கு எத்தன wife, எவ்ளோ குழந்தைன்னு கேளுங்கோ..." என்றார். பெருமிதம் கலந்த வெட்கச் சிரிப்புடன், "தெரியவில்லை..." என்று driver seat-லிருந்து அடிக்குரலில் பதில் வந்தது.

"இங்க, EKO -ன்னு ஹோட்டல் இருக்கு, அது உள்ளேயே shops இருக்கு... நாம mask எல்லாம் வாங்கீடலாம்... முந்தா நாள் நல்ல மழை பேஞ்சு, லேக்கி மார்கெட் எல்லாம் சொத சொதன்னு இருக்கும்... சின்ன சந்து மாதிரி தான் இருக்கும், போறதுக்கு. அப்புறம், முத்து-பவழம் எல்லாம் இங்க பிரசித்தம்... நம்ப அபார்ட்மென்ட் மாடில தான் சிங்கர் சித்ராவோட ப்ரதர் இருக்கார். போன வருஷம் சித்ராவ இன்வைட் பண்ணீருந்தோம். நல்ல கூட்டம், ரொம்ப நன்னா பாடினா.. அடுத்த நாள், ஹரிஹரன் ப்ரோக்ராம் வேற இருந்துது...சித்ராக்கு, இந்த ஊர் முத்து ரொம்பப் பிடிக்கும்.. கிலோ கணக்குல தான் வாங்குவா... எங்க மேலயெல்லாம் ரொம்ப ப்ரியம்... என்னோட பொண்ணு மாதிரி தான் அவள்..." என்றார் ஆங்கிலத்தில். அவருக்கு ஊர் திருவனந்தபுரம். மலையாளமும் ஆங்கிலமும் நன்றாக வரும், not much thamizh என்றார்.

  
ஹோட்டலின் கார் பார்க் அருகே, கடைகள் இருந்தன. இந்திய முகங்களைப் பார்த்ததும், "நமாஸ்தீ... நமாஸ்தீ... welcome sir... good morning... how was your stay..." என்று எளிதில் நெருங்கும் வியாபார முயற்சிகள் இன்முகங்களாய், குரல்களாய் வரவேற்றன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஒரு கடையில் சிறியதாய் நான்கு முகமூடிகள் வாங்கினோம். இன்னொரு கடைக்காரர்,  no buy .. no photos... என்றார்.  ஹாய்... என்ற குரல் கேட்டது. இவள் ஒரு மிஸ் நைஜீரியா, என்று அறிமுகப்படுத்தினார் சிவராமன். 
 


















ஏதோ ஜயித்துப் பெற்ற trophy போல, முகமுடிகளைக் கையில் ஏந்தி, அங்கிருந்த மரத்தடியில் படமெடுத்துக்கொண்டோம். அந்த மரம், தூசி தட்டும் கருவிகளைச் செருகி வைத்த stand போல இருந்தது. 


"நேரே வீட்டுக்குப் போகலாம்... அங்கே ஹாஜியை வரச் சொல்லியிருக்கிறேன்.. ஹாஜி யாரு தெரியுமோ? முத்து வியாபாரி..." என்றார் சிவராமன். Black pearls,coral, dull finish என்று முத்து மாலைகள் இறைந்து கிடந்தன ஹாஜியின் பையில். தரமான முத்துகள். சிறியதாய் சில மாலைகள் வாங்கினேன். அவைகள் என் பரிசாக இருக்கட்டும் என்றார் சிவராமன்.  

 
















மதிய உணவை முடித்து சற்று கண்ணயர்வதற்குள், அங்கே இருந்த ஐயப்பன் கோவிலுக்குச் கிளம்பும் சமயம் ஆனது. கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நம்பூதிரியின் பூஜையும் அன்பர்கள் பஜனையுமாக அந்தக் கோவில் உள்ளே நுழைந்ததும் KK நகர் போல இருந்தது. நடந்துகொண்டிருந்த பஜனையில் தமிழ் பாடல்கள் பாடிக்கொண்டிருக்க, ஒரு ஆப்ரிக்கர் டோல்கி வாசித்துக் கொண்டிருந்தார். அது நிறைந்ததும், ஒரு அரை மணி நேரம் பாடினோம். ஒரு வெங்கடாசலபதி சந்நிதி, அதன் எதிரே கூப்பிய கரங்களுடன் சிவந்த ஆஞ்சநேயர். அருகில் பிள்ளையார் - முருகன், நடுவில் ஐயப்பன் அதற்கடுத்து தனி ஹாலில் சகல சிலைகளும். அங்கு தான் மங்கள ஆரத்தி நடந்தது. மரத்தடியில் ஒரு சிவன் தவித்துக் கொண்டிருந்தார். 

 

 


இரா.கணபதி ஒரு முறை மஹா பெரியவாளிடம் (அவர் வார்த்தைகளிலேயே...),

//....தவிக்க என்ற வார்த்தையை பெரியவாள் சொல்லக்கேட்டதும், அது பற்றி என் கண்டுபிடிப்பைச் சொல்ல வேண்டுமென்று தவிப்பு ஏற்பட்டது. அதைப் பறிந்து கொண்ட சைகாலஜிஸ்ட், "என்னமாவது சொல்லணுமா" என்றார்.


"தவிக்கிறது-ன்ன தவம் செய்யறதுன்னு அர்த்தமோன்னு தோணறது. ஜபம் பண்றது ஜபிக்கறது; அதே மாதிரி தவம் பண்றது தவிக்கிரதுன்னு இருக்குமோன்னு.."


"ஸரியாத்தான் படறது... ஆனா, 'தபஸ்' னா நேர் அர்த்தம் சூட்டுல வறுத்தி எடுக்கறதுதான். ஒரே சிந்தனையா இறுக்கினா அப்படித்தான் ஒரு சூடு பொறக்கும். அப்போ, மனஸ் அசையாம நிக்கறதுதான் தபோ நிஷ்டை. 'தவிக்கறது' - ங்கறச்சையோ, மனஸ் நெலை கொள்ளாம இருக்கும். நெல கொள்ளாம தவிச்சேன்னு சொல்றோமோன்னோ? இப்படி மனஸ் நெலை கொள்ளாட்டாலும் ஏதோ ஒரு விஷயத்துலேயே அது உள்ளூர ஒரே ஈடுபாடா இருக்கறதாலேதான் அதை அடையறதுக்காக நெலை கொள்ளாம ஓடறது. ஆகையினாலே, ஒன் (சிரித்து) நூதன வியாக்யானமும் ஒரு தினுசுலே ஸரிதான்."//


அன்றிரவு சிவாவின் வீட்டில் விருந்து. மினி பீட்சா, கராபரா என்று களை கட்டியது.  நரேன், நான், கோவை சந்திரன், சிவா, பவதாரிணி, விக்னேஷ், சிவராமன், பூர்ணஸ்ரீ எல்லோரும் பேசி மகிழ்ந்தோம். 


அடுத்த நாள் Bankers Hall -ல் கச்சேரி.

Saturday, January 30, 2010

நைஜீரியா பயணம் - 2


அந்தக் காவலர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் சஹஜமாக கடமையைச் செய்தார்கள். அவர்கள் கைகளில் இருந்த நவீன ஆயுதங்கள் அதை மௌனமாகப் பார்த்துப் பழகியிருந்தன.  சிறுமைப்படுத்தப்படும் எந்த ஒரு சமூஹமும் தனியே ஒருவன் கிடைத்தாலோ அல்லது அவர்கள் கூட்டமாக இருக்க நேர்ந்தாலோ அச்சம் தவிர்த்து வன்முறையில் இறங்கும். ஆனால், இந்தியர்களுக்கு வேறொரு அபிப்ராயம் இருந்தது.

"அவா எல்லாம் basic -ஆவே, lazy people... அதுனால தான் கொள்ளையடிக்கறா..." என்றபோது கண்மூடித்தனமாக அப்படியே நம்ப முடியவில்லை. இருந்த சில நாட்கள் பார்த்ததில், அதீதம் அவர்கள் இயல்பாயிருந்தது. பணிவு, முரட்டுத்தனம், புரிந்துகொள்ள முடியாமை, மாற மறுத்தல் எதுவுமே மிகையாக இருந்தது. இந்தியாவின் எந்தப் பிரிவினரும் ஆளுமை எண்ணங்களை மறைத்து, தங்களுக்குள் அதிக வித்யாசங்களின்றி பழகிக்கொண்டிருந்தார்கள். அதற்கு வலுவான இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று ஷீரடி இன்னொன்று ஒவ்வொரு இந்தியனும் இரண்டோ மூன்றோ நைஜீரியர்களை ஆண்டு கொண்டிருந்தான். வீடுகளிலும் ஆங்கிலேய மரபுகள் பேணப்பட்டன, வேலைக்காரர்கள் நம்மிடம் பழகும் விதத்திலும், நாம் அவர்களை நடத்தும் விதத்திலும்.

நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கன்வேயர் பெல்ட்டில் பெட்டிகள் வந்தன; பெட்டிகள் மட்டும் வந்தன. வீல் சேர் வரவேயில்லை. எமிரேட்ஸ் அதற்கு எந்த பதற்றமும் கொள்ளாது, ஒரு காகிதத்தைக் கொடுத்து நிரப்பச் சொன்னது. படம் மட்டும் வரையவிலையே தவிர, பாகங்களைக் குறித்தேன். கார்கோவிற்கே சென்று பார்க்கிறேன் என்று போய், சில மணித்துளிகள் சென்ற பின் வெறுங்கையுடன் வந்தான் எமிரேட்ஸ் எனக்களித்த தாற்காலிக உதவியாளன். துபாயில் ஏற்ற மறந்திருப்பார்கள்... இன்றிரவோ நாளையோ வந்துவிடும் என்றனர்.

(ஒருமுறை, வரச்சொல்லியிருந்த சிஷ்யன் வரவில்லை; பதிலாகத் தொல்லைபேசினான். "சார்... நாலு மணிக்கு வரச்சொல்லீருந்தேள்.. நான் கெளம்பீட்டேன், இன்னும் அரை மணி கழிச்சு வந்துடறேன் சார்.."

"ஏண்டா.. இப்பவே மணி நாலு; நீ இன்னும் வரல... இதுல அர மணி கழிச்சா, மூணு முப்பதுக்கெல்லாம் எப்படி வருவே?" :) அதன் பிறகு சில மணித்துளிகள் கழிந்த பின் என்று நானும் சொல்வதில்லை).

"Connecting flight miss ஆனாலோ இரு பயணங்களுக்கு இடையே அதிக நேரமிருந்தாலோ பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொண்டு தங்குமிடம் உணவு தருகிறீர்களே... என் வீல் சேர் வரும் வரை இதை வைத்துக்கொள்ளட்டுமா", என்று அமர்ந்திருந்த சக்கர நாற்காலியைக் காட்டிக் கேட்டேன். அப்படி எந்த ஏற்பாடும் எங்களால் செய்ய இயலாது என்று விநோதமாகப் பார்த்தபடி பதில் சொன்னார்கள்! அங்கிருந்து வெளியே வந்து pajero போன்ற ஒரு காரில் ஏறினோம். காண்கிற இடங்களிலெல்லாம் நைஜீரியர்கள் பளீரென்ற வண்ணங்களில் ஆடையுடுத்தி நடந்து கொண்டிருந்தார்கள். கருப்பு, கருப்பர்கள் என்று காலகாலமாய்ச் சொல்லிச்சொல்லி, நூற்றாண்டுகளாய் கிளர்ந்திருந்த தாழ்வுணர்ச்சி அவர்களுக்கே உள்ளுணர்வில் கலந்திருந்தது, ஹிந்து மதம் பிற்போக்கானது என்று சொல்லிச்சொல்லி ஹிந்துக்களுக்கே தங்களைப் பற்றி கேவலமாய்த் தோற்றம் காட்டியதைப் போல...  






 







































வழியில் பார்த்த கார்களெல்லாம் ஏதோ ஒரு இடத்தில் சிதைந்திருந்தன... மஞ்சள் வர்ணத்தில் கும்பலாய் ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ போல வேன்கள் விரைந்தன. மூன்றாம் உலக நாடு எனினும், லேகோஸ் நிறைய  flyover-களுடன்  மக்கள் 'இடம்' பெயர்ந்து 'வலம்' வர உதவியபடியிருந்தது. INFAS -ன் chairman சிவராமன் மாமா வீட்டில் தங்கினோம். நிறைய காவலுடன் கூடிய பத்தடுக்கு மாடி. ஆனால், முதல் மாடியிலேயே இருந்தார். 






 

























நிம்மதி, நம்ம ஊர்ல மடிப்பாக்கம், இந்த ஊர்ல மாடி பக்கம் என்று நினைத்தேன். 
அங்கே சமையல் செய்யவும் வீடு வேலைக்கும் இரண்டு பெண்மணிகள் இருந்தனர். முதல் நாள் பார்த்தவளின் பெயர் ஆலிஸ். சென்றதும் பெரிய கோப்பை நிறைய தேநீர் உப'சரித்தாள்'. ஆலிசுக்கு உதவியாக இருந்த சின்னவளின் பெயர் கேட்டதும், அந்த பெயரை மெலிதாய் முனகினாள். மீண்டும் கேட்டதும், ஆலிஸ் சற்று உரக்கச் சொன்ன பெயர் "கம்ஃ போர்ட்". அவள் அதைச் சொன்ன த்வனி, சினிமாவின் சண்டைக்காட்சிகளில் வரும் கும்-ஹய்.. (Gum -hai) என்ற குத்தொலி போன்றிருந்தது.






நைஜீரியா பயணம் - 1
















ஒட்டகப்பால் வேணுமா?  அல்லது ஓட்ட, கப்பல் வேணுமா?

















விவேகானந்தர் தெரு இவ்ளோ நீளமா!!



















பனை போல வீடு கட்டி... இது தான் துபாய் குறுக்கு "sand"hu













பெண்மையில் தோன்றும் ஒயில்..
ஆண் மயில் போன்றும் எழில்..
ஆயிரம் மைல்கள் வழியில்,
ஆயினும் நில்லாத நைல்.

























இருநூறு ப(ண்)டங்கள்; இரு சதமும் தண்டங்கள்!!




















முகமது விமான நிலையம், எனில் உடலது கோபுரமோ?
(Murtala Mohammed Airport, Lagos)


 

நுண் மாண் நுழைபுலம் இல்லான் 
கண் காண்  எழில்-நலம் இல்லான்
துஞ்சான் துயர் தரு சொல்லால்,
மிஞ்சான் தன் அடையாளத்தே.   

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கிருத்திகா திடீரென "தோன்றி", இந்த சென்ட் நல்லா இருக்கா என்று என் மூக்கில் தேய்த்தபோது, மாகாணிக் கிழங்கின் வாசனை மீசையில் படிந்து, Estee Lauder, Royal Pearls of Avon, Stetson Black, Eternity, Forever Elizebath, Kamasutra-வின் செண்பகப்பூ மணம் அனைத்தையும் ஒரு கணம் நகையாடியது. சட்டென்று Facebook-ல் இருந்து நிமிர்ந்தேன். 


கடந்திருந்த வருட இறுதி, கழிந்ததெப்படி என்று எண்ணங்கள் முகாமிட்டன.


மார்கழிக்கும் முன்னே நவம்பர் அஸ்தமிக்குமுன் உதயமாகிவிட்ட இசை விழா பொங்கல் கடந்தும் தீர்ந்துவிடாமல் இருந்ததது. சென்னை சங்கமத்தில் காயத்ரி வெங்கடராகவனின் கச்சேரி. தி.நகர் நடேசன் பூங்காவில் இருந்தது. மறுநாள், பொங்கலன்று பின் மதிய வேளையில் சிவராமன் சாரைப் பார்க்கப்போனேன்.


"வா.. நாகராஜா..."


"இன்னிக்கு நைட்டு நைஜீரியாவுக்குக் கெளம்பறேன் சார்... நமஸ்காரம் பண்றேன்..."


சார் வீட்டிலிருந்து சிருங்கேரி ப்ரவசன மண்டபம்; அங்கே, வசுதா ரவி பாட்டு. வீடு வந்து சேர்ந்த போது ஏழரை மணி. இன்னும் ஒரு துரும்பு கூட எடுத்து வைத்துக் கொள்ளவில்லை!  தோராயமாக ஒரு packing. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதிகாலை மூன்றரை மணிக்கு கிளம்புகிறது. வீல் சேரையும் செக் இன் செய்த பின் நிம்மதியாகக் காத்திருந்தோம்.


துபாய் காலை 6 மணிக்கு நல்ல குளிராயிருந்தது. பின் தூங்கி முன்னெழுவாள் பத்தினி என்று தங்கவேல் காமெடி நினைவிற்கு வந்தது ("அது எப்படிங்க... ஒங்க முதுகுக்குப் பின்னால தூங்கி, மூஞ்சிக்கு முன்னால முழிக்கறது?").
அதற்கு நேர் மாறாக, Disability Priority-ல் எல்லோருக்கும் முன்னால் ஏற்றி விடப்பட்டு, கடைசியாய் இறங்கினேன்.


வீல் சேர் உதவியாளர் பாவதாரிணியையும் சந்திரனையும் பார்த்து, "எவ்வளவு வேகமாக ஓட முடியும் உங்களால்... இன்னும் இருபது நிமிடத்திற்குள் நாம் வெகு தூரம் செல்ல வேண்டும்" என்று ரசம் வைத்தார் (புளியைக் கரைச்சு கரைச்சு போரடிக்கறது; அதான் டெவலப்பிங்...) என் மின்னஞ்சல் முகவரி (kalyaani@gmail.com) நினைவிற்கு வர, வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடியதும், மனிதர்களை இரஹசியமாய் உள்வாங்கும் குழாயின் வாயில் தெரிய, வாயிலில் நுழைந்தோம். இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன எனினும், உன்னால தான் லேட்டு என்ற ஸ்னேஹம் குறைந்த பார்வைகள் தென்பட்டன.


ஐக்கிய அரபு நாடுகளை குறுக்காய்க் கடந்து, jedda -வைத் தாண்டியதும் கீழே செங்கடல்.  கீழே மேகங்கள், குடும்பப் பாங்கான கதாநாயகிகளின் அருவி டூயட் போல மெல்லியதாய் திரைபோட்டதில் Red Sea, செங்க-dull-ஆகத் தெரிந்தது.


கரை முடிந்து கடல் தொடங்கி, கடல் முடிந்து கரை தொட்டதும் 'புனரபி ஜனனம் - புனரபி மரணம்' என்ற வரிகளும் இதே போல்  மனக்கரையில் மோதி மோதி அரித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். ஈஜிப்டின் லக்சோரைத் தொடுவது போல் ஜாலம் செய்து சூடானைக்கடக்கையில் நைல்  நதி விழிகளைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. அடுத்து திபெஸ்தி எரிமலைகளையும் சஹாராவையும்  கடந்து மாலை மதியம் ஒன்றரைக்கு முர்தாலா முஹம்மத் விமான நிலையத்தை அடைந்தோம்.


பழைய தோற்றமும் பழையதொரு வாசனையும் சூழ்ந்த நிலையம். என்னை வரவேற்ற நைஜீரியன் விடாமல் பாடிக்கொண்டேயிருந்தான். நைஜீரியா ஒரு நல்ல நாடு; அதன் மக்கள் அன்பானவர்கள். யாரோ சிலர் ஏதோ செய்வதால் என்னுடைய நாட்டைப் பற்றிக் கேவலமாக நினைத்துவிடாதீர்கள் என்று சொன்னான்.  ஆங்கிலத்தை அழகாகப் பேசுகிறீர்கள், ஏனோ, தப்புத்தப்பாய் ஆங்கிலம் பேசினால் பிடிக்கவில்லை என்றான். Lift இல்லாத விமான நிலையம். எஸ்கலேட்டரின் அருகில் இன்னொரு வரிசைப் படிகள் இறங்கிக்கொண்டிருந்தன. அதில் சின்ன மேடை சேர்த்து அதை இயக்கி மேலே கொணர்ந்து, அதில் வீல் சேரை நிறுத்தி, கேட்டைப் போட்டார்கள். மெல்லக் கீழிறங்கியதும், சட்டென மேடையாக்கி அரசியல் பேசலாம் போல ஒரு இடமும், கீழே நிறைய மஹா ஜனங்களும் குழுமியிருந்தனர். அங்கிருந்து நம்ம ஊர் இரயில் நிலையம் போல சரிவுப்பாதை (ramp) இறங்கியது.


நைஜீரியா என்றதும் ஐம்பது ரூபாய்க்காக AK47-களை இடுப்பில் நெருடி கொள்ளையடிப்பார்கள்; தங்கம் போலிருந்தாலும் தலை போகும் தருணமுண்டு போன்ற தகவல்களை பார்த்தவரெல்லாம் சொல்லியிருந்தார்கள், மணி அண்ணாவைத் தவிர. மூவரின் Hand Luggage-களும் கைகளுக்கிடையில் நசுங்கிக் கொண்டிருந்தன. அவன் இன்னமும் பாடிக்கொண்டிருந்தான்.


தமிழகத்தின் கீற்றுக் கொட்டகை திரையரங்கின் பாத்ரூமில் கூட, அடக்கி வைத்திருந்ததை அவிழ்த்துவிட்ட சுகத்தில் அசூயை சற்று நேரம் மறையும், ஆனால், Immigration-ல் காத்து நின்ற வெள்ளையர்களும் கொரிய-சீன முகங்களும் நிற வெறியை பூசியபடி நின்று கொண்டிருந்தன. எனக்குக் கோபம் கோபமாக வந்தது.  அங்கிருந்த நைஜீரியா காவலர்கள் என்ன சொன்னாலும் அது மதிக்கப்படவில்லை. அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அந்தப் பயணிகள் கவனமாய் இருந்தார்கள்.


Wednesday, November 25, 2009

தாதரும் மும்பை மயிலும்... 3

நீண்ட பயணங்களின் வெறுமை எல்லோருக்கும் பொதுவானது தான். அதை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் மனிதர்கள் ஸ்வாரஸ்யமானவர்களாகி விடுகிறார்கள்.


நிற்கின்ற ஊரிலெல்லாம் விற்கின்றவரைத் தேடும் கண்கள்,  கைபேசியிலோ கணினியிலோ தங்களைத் தொலைக்க முயன்று, அந்த எட்டு பேரில் யாரைப் பார்த்துச் சிரிப்பது என்று யோசித்தே ஒரு பகலைக் கடக்க முயல்பவர்கள், பேப்பரோ புத்தகமோ தாங்களாகவே தந்து, தன்னைக் கவர்ந்த செய்தியைப் பேசி-விவாதிப்பவர்கள், குழந்தைகளைப் பார்த்துச் சிரித்து நட்புகொள்ள ஆரம்பித்து, பின் திரும்பி உட்கார்ந்து உண்பவர்கள், மேல் படுக்கையை விட்டு இறங்காது தன்னைத் தானே சந்தோஷப்படுத்திக்கொள்ள முயலுபவர்கள், மேல் படுக்கையில் படுத்தபடி, பாதைப் பக்கம் தலை வைத்து வருவோர் போவோரை ஆராய்பவர்கள், துக்கச் செய்தி கேட்டு மனம் முன்பே இடம் சென்று சேர்ந்திருக்க, உடல் தாமதமாய்ச் செல்லும் வலியில் இருப்பவர்கள், எந்த ஊரில் நின்றாலும் இறங்கி நிற்கும் மண்-காதலர்கள், சஹ  பயணியைத் தாற்காலிகமாகக் காதலிப்பவர்கள், இறங்க வேண்டிய ஊருக்கு வெகு நேரம் முன்பே பரபரப்பவர்கள், இப்படி எல்லாம் வலைப் பக்கங்களில் எழுதவேண்டி யோசித்தே, பொழுதைக் கழிப்பவர்கள் என்று எத்தனையோ எண்ணக்குவியல்கள், கற்பிதங்கள் வண்ணமிகு ஆடைகளுக்குள் உடல்களை மறைத்து விட்டு வேறு பெயர்களில் பயணச்சீட்டையே ஆவணமாய் வைத்துக்கொண்டு அந்த நேரத்து சொந்த இடத்தை ஆணவமாய் ஆக்ரமிக்கும் பயணங்கள்...


பகலில் உட்கார்ந்துகொண்டே தூங்கினேன். வந்த வழி ஞாபகமிருந்தது. துங்கபத்ரா சொத்துக் கணக்கைக் காட்டி விட்ட நீதிபதி போல் பல இடங்களில் பாறைகளாய்த் தெரிந்தது. மறைபொருள் காட்டுவதுதானே மந்த்ராலயம்... (அப்போ, வெள்ளமா தண்ணி ஒடீண்டிருந்தா என்ன சொல்லுவே? ஏதாவது சொல்லவேண்டியது தான், ஞானம் தளும்பி வழியறது பார், இங்க வந்தவாளோட மனசு மாதிரியே நிறைஞ்சு இருக்கு பார்னு எதாவது...) 


கடலை விற்கும் பையன்கள் எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறதென்று  நான்கு பேராய் உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள்... பெரியவனாய் இருந்த, பானையில்-லஸ்ஸி விற்பவன் பர்சில் ஆதர்ச நடிகனின் படத்தை வைத்திருந்தான். சைடு பெர்த் முதியவர் யாரென்று கேட்டதும், தலைவனைப் பற்றி கேள்வி வந்த மகிழ்ச்சியில், ஜூனியர் என்.டி.ஆர்.என்று பெருமையுடன் அந்தப் படத்தை இன்னொருமுறை பார்த்தான். ஒரு நாள் வியாபாரத்திற்கான முதலீட்டையே அபிமான நடிகனின்  ஒரு படத்தைப் பார்க்க செலவு செய்யும் பெருமிதம் தெரிந்தது.


கட்சி நிதி என்று ஏழையாய் இருக்கும் தொண்டனிடம் கூட, பணம் இல்லாட்டி என்னப்பா... அந்த வாட்சைக் குடேன் என்று, ஒன்றியமோ வட்டமோ கேட்க, தானைத் தலைவரின் உரை கேட்டு உணர்ச்சி வசப்பட்ட, சலவை கசங்கு முன் கையிலிருப்பதைக் கழட்டிக் கொடுத்தவரை என் பதின் பருவ ஆரம்பங்களிலேயே பார்த்திருக்கிறேன். "அடாது மழை பெய்தாலும் விடாது குவிகிறது கழக நிதி" என்று தூண்டில் போட்டதில், அன்று விற்ற பூக்காசை அப்படியே தொலைத்துவிட்டு, அடுத்த நாள் பெருமிதமாய் அந்தப் பேச்சின் கேசட்டை எனக்குப் போட்டுக் காட்டிய பூக்கடை பாய்க்கு நான்கு குழந்தைகள். பத்து வயதான பையன் நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டே இருப்பான்; அவனுக்கு உடலின் சமநிலையில் ஏதோ குறைவிருந்தது. அதற்கு வைத்தியம் பார்த்திருக்கலாம். இரண்டு பெண் குழந்தைகள் வேறு.



யுவதிகளிடம் யாரவது உன்னை எங்காவது இடித்து விடுவான் என்று கூறியே அணைத்துக் கொண்டு "பாதுகாப்பளிக்கும்" கிழவர்கள் போல, இல்லாதவர்கள்,   இல்(ill-குடும்ப)-ஆதவனை(சூரியனை) காலகாலமாக வழிபட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.


அன்றிரவும், மொபைலை அணைத்துவிட்டு பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ட்ரெயின்  அஞ்சு மணிக்கு சென்ட்ரல் போய்டும் என்று அனுபவஸ்தர்கள் கூறியதால் நாலரைக்கு அலாரம் வைத்திருந்தேன். நல்ல உறக்கம்.


திடீரென ஒரு பரபரப்புச் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்ததில், சென்னை சென்ட்ரலுக்குள்  நுழைந்து கொண்டிருந்தது இரயில். பலரும் இறங்குவதற்குத் தயாராக நின்றிருந்தனர். மிக மெலிதாக என் கைபேசியின் அலார ஒலி எங்கோ கேட்டது. நான், அருண், சந்திரன் அனைவரும் தேடினோம், சாத்தியமாகிற சகல சந்துகளிலும். கிடைக்கவில்லை. 


பத்து நிமிடம் பொறுத்தால் திரும்ப சப்தமெழுப்பும் (snooze) என்று கூட காத்திருந்தோம். சுவிட்ச் off செய்திருந்ததால் அதுவும் இல்லை. நான் அமர்ந்திருந்த ஒன்றாம் எண் இருக்கையில் (S4) ஜன்னலுக்குக் கீழே,  இருக்கைக்கை சேரும் இடத்தில் இரயிலின் உட்புறச் சுவற்றில் ஒரு பொந்து இருந்தது. காதில் சிம்மேந்திர மத்யமம் ஒலித்தது. அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்...


வண்டி நேரே ஓடுகையில், பக்கவாட்டில் ஆடுகின்ற ஆட்டத்தில் என்  மொபைல் பையிலிருந்து நழுவி, அணைத்து  வைத்திருக்கிறேன் என்பதை மறந்து  சைலென்ட் மோடில் இருக்கிறோம் என்ற நினைவில், அதிர்ந்து அதிர்ந்து ஓட்டைக்குள் விழுந்திருக்க வேண்டும். அருணின் கைபேசியிலிருந்து வெளிச்சம் பாய்ச்சியதில் பூச்சி புழுக்கள் தெரிவதாகச் சொன்னான். 


விளக்குகளை அணைத்துக்கொண்டே வந்தார் ஒரு ஊழியர்.  "இத எடுக்கணும்னா அத ஓடைக்கணும்பா... நீ மொதல்ல எறங்கு, இந்த வண்டி இப்போ ஷெட்டுக்கு போகப் போகுது... ஆர்.பி.எஃப். ஆண்ட சொல்லு" என்றார். அங்கிருந்து வெளியே வந்ததில் நேரே அமர்ந்திருந்த மூன்று பெண் காவலர்களிடம் சொன்னேன். ஒரு பெண் தன்  வாக்கி -டாக்கியில் ஏதோ தகவல் கொடுத்து ஆர்வமாய் ஏதோ சொல்ல முற்பட, இன்னொருத்தி, "ஒனக்கு ஏன் இந்த வேலை.. பேசாம இரு என்று சொல்லிவிட்டு, வாசல்ல சரவணபவன் மாடில கம்ப்ளைன்ட் குடுங்க, போங்க..." என்றாள்.



கடமை தவறாத காவலர்கள் எழுதிக் கொடுத்த புகாரில் இருந்த விவரங்களையே மீண்டும் மீண்டும் எழுதச் சொன்னார்கள். வாங்கிப் பார்த்துவிட்டு, 


"பேர் எழுதுப்பா..."
'மேலே எழுதிருக்கு சார்...'


"அட்ரெஸ் எழுதுப்பா..."
'பேருக்குக் கீழ எழுதிருக்கு சார்'


"உன்  நம்பர் எழுது..."
'எழுதிருக்கு சார்..'


"சரி, நீ போ, எதுனா தகவல் கெடச்சா சொல்றோம்..."
"சார், அந்த சந்துல விழுந்திருக்கு.. அத எப்படி எடுக்கறது, ஷெட்டுக்குப் போய் பாக்கனும்னா நீங்க ஒரு லெட்டர் குடுத்தாலோ, ஃபோன் பண்ணி சொன்னாலோ, அங்க பாக்கலாம்ல சார்..."


"நீ, வீட்டுக்கு போய் மத்யானத்துக்குள்ள, இந்த செல் வாங்கின பில்லு கொண்டு வா... அப்புறம் பார்க்கலாம்..."


"சார்.. அதுல முக்கியமான contact details , draft எல்லாம் இருக்கு..."


"அதெல்லாம் கஷ்டம்பா... எத்தனையோ பேர் டெய்லி செல்லத் தொலைக்கறாங்க... பில்லு கொண்டு வந்தா, அப்பிடியே இந்த ஐவி நம்பரோ ஆர்வி நம்பரோ இருக்குமே, அதையும் கொண்டு வரணும்.."


மேற்கொண்டு எதாவது கேட்டால், நீ நோக்கியா CEO , MD எல்லாரையும் கூட்டிண்டு வா என்பார் போலிருந்தது. என்ன கேட்டால், நான் அங்கிருந்து வாழ்க்கை வெறுத்து திரும்பி விடுவேன் என்று முயற்சித்துக் கொண்டிருந்தார். சரி, நமக்குத் தெரிஞ்சவா யாராவது இரயில்வேல இருக்காளான்னு பாப்போம் என்று வீடு அடைந்தேன். சிஷ்யனின் உறவினர் ஒருத்தர் Pathway Inspector ஆகா இருக்கிறார் இன்னொரு நண்பர் ICF-ல் இருக்கிறார் என்று காய் நகர்த்தியதில், அந்த இரயில் ராத்திரி எட்டு மணி வரைக்கும் அங்க தான் இருக்கும், ஈவனிங் போய் பாத்து இருக்கான்னு பாக்கலாம் என்று சொன்னார்கள்.


அதுவரை, காலத்தைக் கழிக்க மனமின்றி, என் மொபைல் தொலைந்து விட்டது, டியூப்ளிகேட் சிம் வேண்டும் என எழுதிக்கொடுத்து, 'இப்போ மூணு மணி, ஆறு மணிக்கு ஆக்டிவேட்டு ஆயிரும்' என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். சொன்னதில் பாதி நடந்தது. ஆக்டி ஆகவில்லை;வேட்டு ஆனது!  Unregistered Sim என்று கூறிக்கொண்டேயிருந்தது.


அருண் கிளம்பி ஷெட்டுக்குப் போனான். "அந்த இரயிலா? அது பதினொரு மணிக்கே திரும்பி எக்ஸ்ப்ரஸ்ஸா பாம்பேக்கு போயிருச்சே... எதுக்கும் ஜிஎம்முக்கு ஒரு புகார் எழுதுங்க..."  அன்று இரவு 'இதம் ந மம' என்று தெளிந்தேன். BSNL வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொலைபேசியதில், "சார்... ஒரு சிம் ஆக்டிவேட் ஆக 24 மணி நேரம் ஆகும், நீங்க பொறுமையா காலைல பாருங்க, அப்பாவும் வரலைன்னா, கூப்பிடுங்க" என்றனர்.


புதன் மாலையும், வியாழன் மாலையும் sms-கள் அழைப்புகளின்றி கழிந்தது. வெள்ளி காலை கூப்பிட்டபோது, உங்க சீரியல் நம்பர தப்பா டைப் பண்ணீட்டாங்க; இன்னிக்கு மதியானம் சரியாயிடும் என்றனர். மதியம் அழைத்ததும், மீண்டும் தவறான எண் அனுப்பிவிட்டோம், இன்று மாலை சரியாகும் என்றார்கள். வெள்ளி மாலை தான் தீனி கிடைத்தது standby  மொபைலுக்கு. மூன்று நாட்களாக துருவக் கரடி போல் தூங்கிக்கொண்டிருந்தது. 


வியாழன் இரவு கடைக்குப் போய், 5030 basic model ஒன்று வாங்கி வந்தேன்... இப்போது ஒவ்வொரு மெசேஜுக்கும் 'யாரடி நீ மோஹினீ ', 'ஏனுங்க நீங்க யாருன்னு சொல்லிபோட்டு போங்க' என்பது போல் எழுத்துக்களை அமுக்கிக் கொண்டிருக்கிறேன்...



Monday, November 23, 2009

தாதரும் மும்பை மயிலும்... 2


உறங்கச் சென்றபோது, கை பேசியை எங்கே வைத்துக்கொள்வது என்று யோசித்துவிட்டு, கால் சட்டைப் பையில் வைத்துக்கொண்டேன். குறுக்கு வாட்டில் வைத்ததும் German Shepherd-ஐப் பார்த்து  stay என்று சொன்னதைப் போல், அமர்ந்துகொண்டது. குழந்தையை விட்டுவிட்டு சற்று வெளியே போகநேர்ந்தால் "கண்ணு... அம்மா வரவரய்க்கும் பொட்டாட்ட கோந்திருக்கோணும்...என்ன..." என்பார்கள் ஈரோட்டில்.

"மாமா, பேன்ட்டுல எல்லாம் வெச்சுக்காத... என்ட்ட குடு,  மேல வெச்சுண்டு காலேல தரேன்" என்றான் அருண்.

"வேண்டாம், ஜாக்ரதையா வெச்சுப்பேன்.. எனக்கே பாத ராத்திரி ஒன்னக் கூப்பிடணும்னா, கால் பண்ணனுமே, எல்லாரும் தூங்கீண்டு இருப்பா"

இருள் தந்த சோம்பலில் வேறு வழியின்றித் தூங்க ஆரம்பித்திருப்பானோ மனிதன்? உறக்கம் மட்டும் இல்லையெனில், இன்னும் எந்த அளவிற்கு சாத்தானின் பட்டறை ஆகியிருக்கும் மனம்! இரவையும் தூரத்தையும் ஒரு சேரக் கடந்தபடி விரைந்துகொண்டிருந்தது வண்டி. அதற்குத் தெரியாமல் ஆயிரக்கணக்கான உலகங்களையும் நிகழ்வுகளையும் கனவாய் நினைவுகளாய்த் திருட்டு இரயிலேற்றி, விஷமமாய்த் துயில்கொண்டிருந்தனர் பயணிகள்.

தாதர் வந்தததும், ஸ்டேஷனில் தீராது வந்துகொண்டேயிருந்த திரௌபதி வஸ்த்ரப் பிரயாணிகளை, துச்சாதன சர்தாஜிகள் சின்ன சின்ன ஃபியட்டுகளில்  கொத்துகொத்தாய் ஏற்றி, நெரிசலைக் குறைக்க முயன்றுகளைத்துக் கொண்டிருந்தர்கள். ஆனால், கிருஷ்ணர் உயிர்களை சலிக்காது அனுப்பிய வண்ணமிருந்தார். சலித்து அனுப்பினால் இராவணர்கள் ஏது? கம்சன்கள் ஏது? கிருஷ்ணர் தான் ஏது? மாலவனே மூலவனாய் வேலையற்றுப் போயிருப்பான்!!

ஒரு டவேராவில் ஏறி மூன்று திருப்பங்கள் கடந்ததும் தான், மும்பை என்றால் மனதில் தோன்றும் பிம்பமாய் ஒரு பெண், சற்று பரபரப்பாக, மெல்லிய பூச்சுகளின் மேலே சிற்சில முத்துக்களாய் தோன்றிய துளிகளைப் புறக்கணித்து, காற்றில் அலைந்த கற்றைகளை நளினமாக நகர்த்தியபடி சென்றாள். செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், அகாடமி போல ஒரு திருப்பத்தின் முக்கில் இருந்தது. அதைக் கடந்து சற்று தூரம் சென்றால், அன்னபூர்ணா.  மூன்று மாடிகள் இருப்பதால், நல்ல வேலை முதல் மாடீலேயே கெடச்சுது என்று சந்தோஷப்படுவார்கள் என்று எண்ணியோ என்னமோ,
Lift இல்லாத முதல் மாடியில் அறை.   :P

அறை கிடைத்தால் அனுபவிக்கணும்;ஆராயக்கூடாது என்றெல்லாம் அபத்தமாய் வசனங்கள் ஞாபகம் வராமல் பார்த்தபோது, மூன்று விஷயங்கள் கண்ணில் பட்டன. ஏ.சி.மெஷின் இருந்தது; ஆனால், அந்த குளிரோ காற்றோ படுக்கைக்கு வராத அளவில் ஒரு அகலமான செவ்வகத் தூண் இடையில் இருந்தது. 26 இன்ச் நீளமிருக்கும்... தரையில் உட்கார்ந்து சிலம்பக்கட்டை போல் சாதகம் செய்தேன். குளியலறையில் நுழைந்ததும்
exhaust fan எல்லாம் வைத்து, தேவலை என்று நினைப்பதற்குள், அதன் இறக்கைகளிடையே தெரிந்த நிறம் எங்கோ பார்த்தது போல் இருக்கவே, உற்றுப் பார்த்தேன். அடப்பாவி... அது, ஹாலில் இருந்த திரைச்சீலை. இது வெளியே அனுப்பும் காற்று அறைக்குள்ளேயே ஏ.சி.யிலேயே வட்டமடிக்கும்! எப்படி மூடினாலும், சிந்திக்கொண்டேயிருந்து ஒரு காலப்ரமாணத்தைத் தந்துகொண்டேயிருந்தன  குழாய்கள்.

படிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பிடிகள் ஏதுமின்றி, வழவழப்பாய் வேறு இருந்தன.

மாலை, சிவஸ்வாமி அரங்கில் ரமேஷ் ராமமூர்த்தி வரவேற்று உபசரித்தார்.  ஒலிப் பொருத்தச் சோதனைகளுக்குப் பின் Green Room-ல் என்னுடைய மும்பை உறவினர்களைச் சந்தித்துவிட்டு ஆறரைக்குத் தொடங்கிய கச்சேரி ஒன்பதரைக்கு முடிந்தது. விமர்சனம் இங்கே. பத்து மணிக்கு அறைக்குத் திரும்பியதும், உணவு இருக்குமா என்ற கேள்வியுடன் சந்தேகமாய் ஆர்டர் செய்தவைகள் அரை மணி நேரம் கழித்து வந்தன. Alu parathaa, Butter Naan, Channa Masala-வுடன் Pinapple Raithaa உன்னுயிரைத்தா என்றது. நல்ல பசியினால் சுவை கூடித் தெரிந்தது.

அடுத்த நாள் என்னை மகாலட்சுமி கோயிலுக்கோ, சித்தி விநாயக் கோவிலுக்கோ அழைத்து செல்லவும் தன் சித்தப்பா வீட்டில் காலை உணவிற்கு அழைத்திருப்பதாகவும் பவதாரிணி கூறினாள்.  இந்தப் பிறவியில் இன்னொரு முறை இந்தப் படிக்கட்டுகளை இறங்கி ஏறுதல் சிரமம் என்று மென்மையாக மறுத்துவிட்டு, அறைக்குள்ளேயே அடைந்து கிடந்ததில் (இதுல என்ன தில்?) அன்றைய கச்சேரிக்கு வந்திருந்த சஞ்சீவ், நெற்குணம் ஷங்கர், சேர்த்தலை அனந்தக்ருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்தேன். மதியம் இரண்டு மணிக்கு பொவாய்-சேம்பர் மியூசிக் கச்சேரிக்காக கார் வந்தது.

படிகளில் பின்புறமாக இறங்கும்போது திடீரென, இரண்டு வினாடிகளில் கீழ் படியில் இருந்தேன். அந்த இரண்டு வினாடிகளில் ஒரு பிடிப்பிற்காய் கை அலைந்திருக்க வேண்டும்; ஆனால் கவிழ்ந்திருந்த ஆணுடலில் அபாய அடிகளைத் தவிர்க்க வேண்டி, தாடையையும் இடுப்பையும் சற்று உயர்த்திக் கொண்டேன் [Or else, you would have heard a self written "tetsimonial"(testi-moanial)].அருண், நான்  சின்னக் குழந்தைகள் போல சறுக்கி இறங்கியதை எண்ணி, சாதரணமாக என் வீல்ச்சேரை பிரித்தவன், விவரம் தெரிந்ததும் கொஞ்சம் அதிர்ந்தான்
.

டிரைவர் துரை திருநெல்வேலிக்காரர். பொவாய் எப்படி மலையாக இருந்தது, அதைக் குடைந்து எழுப்பிய கட்டடங்கள், அங்கே மலையில் இருந்த மிருகங்கள், திடீரெனத் தோன்றிய சிறுத்தை, வாயில் கவ்வியபடி எல்லோரும் உறைந்து நிற்க, அது கவ்விச்சென்று, ஓடியபடியே இரத்தம் குடித்து சக்கையாய் கீழே போட்டு இறந்துவிட்ட குழந்தை, பீதியில் உறைந்த மக்கள், அந்த அச்சம் குறைக்க, தேசியப் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு, அவிழ்த்து விடப்பட்டு திரும்பிப் பிடிக்கப்பட்ட வேறொரு புலி போன்ற கதைகளைக் கூறி நிறுத்திய இடம் ஒரு அபார்ட்மென்ட். "அங்க பின்னாடி ஒரு கொக தெரியுதா.. அங்கிருந்து வந்து மேலேயிருந்து பாத்து கவ்வீருச்சு..."

ரஹேஜா விஹாரின் ஹில் சிட் விங்கில் பதினோராவது மாடியில் கச்சேரி. அங்கிருந்து மலையும் பொவாய் எரியும் அழகாயிருந்தன. ஞாயிற்றுக்கிழமை இராஹு காலம் என்பதால், 4-25 க்கு ஆரம்பித்து ஏழே கால் வரை கச்சேரி. பின்னர் பாஸ்தா, இட்லி என சிறியதோர் விருந்துக்குப் பின், பத்தரை மணிக்கு சத்ரபதி சிவாஜி ஸ்டேஷனின் ஜன சமுத்திரத்தில் கலந்து உள்ளே சென்றதும், "இங்கே இரயில்வே சம்பந்தமாக எதையும் விசாரிக்காதீர்கள்" என்று எழுதி ஒட்டிக்கொண்டு ஆனந்தமாக ஒருவர்  கணினியில்  spider solitaire விளையாடிக்கொண்டிருந்தார். இரவு-பகல்-இரவு என்று  நீண்ட பொழுதுகளைக் கழிக்கப் போகும் அயர்ச்சியில் அமர்ந்தேன். இந்த இரயிலிலும் எங்கும் சார்ஜருக்கான பாயிண்ட்டுகள் இல்லை. காலை வரை கலையாதிருந்தது மொபைல், நாளை நடக்கப் போவதை அறியாமல்!
  .

Sunday, November 22, 2009

தாதரும் மும்பை மயிலும்... 1


வெள்ளிக்கிழமை காலை எக்மோர் ஸ்டேஷனை அடைந்ததும் எதிரே பளிச்சென்று வந்தார் OST (ஓ.ஸ்.தியாகராஜன்). அவருக்கு வாஷி காட்கோபர் இரண்டு இடங்களிலும் கச்சேரி. என்னுடன் அருண் துணைக்கு வர, பவதாரிணியும் கோவை சந்திரனும் S4-ல் ஏறினோம்.

எங்கும் சார்ஜருக்கான plug பாயின்ட் இல்லை. பன்னிரண்டு மணிக்குள் ஏதாவது ஒரு பெட்டியில் இதைச் செய்தால் தான் முடியும், பிறகு ஏறும் மக்கள் கூட்டம் கட்டுப்பாடுகளற்றது என்றார் சக பயணி. ஆனால் எங்கும் அது இல்லை, இருந்த ஓரிரு இடங்களில் வேலை செய்யவில்லை. 3rd ஏசியில் சுவிட்ச் மட்டும் இருந்தது, பாயிண்ட்டே இல்லை! ரேணிகுண்டாவிலிருந்து, கரிப்புகை வர ஆரம்பித்தது, இரயிலில்.

எர்ரகுன்ட்லாவைத் தாண்டியதும் கிரானைட் பாளங்கள், பறந்து வரும் பொடிகள், குளங்கள் போன்று வெட்டிய பள்ளங்கள்... கம்பியைப் பிடித்து இழுத்து, வழவழப்பான சுருதி சேர்க்கும் கல் தேடலாம் என எண்ணினேன்... (எண்ணவில்லை,நிறைய இருந்தது,அதனால... நினைத்தேன் போட்டுக்கலாம்...)

பாரதி மணி மாமா கொடுத்திருந்த "பல நேரங்களில் பல மனிதர்கள்" கையிலேயே இருந்தது. அன்னை தெரேசாவை (7வது கட்டுரை) முடிக்கும்போது, muddanur -வை, optical illusion -ல் முத்தன்று என்று படித்தேன். dyslexia?

சற்று நேரத்தில் பக்கத்து சீட் பயணி சீட்டில் எழுந்து நின்றான்...!! சீலிங் ஃபேனுக்கு அருகில் சென்ற அவன் கை, அதற்கும் பின்னே இரயிலின் கூரையைத் தொட்டு வெளிவந்தபோது, கைகளில் இருந்தது அவனுடைய ஷூ!! கோவை சென்றபோது, TTE, சுருட்டிய நூறு ரூபாய் நோட்டுகளை, ஜன்னலில் ஸ்க்ரீன் தொங்கும் கம்பியில் தொங்கும் சந்தில், ஸ்க்ரீனின் சுருக்கங்களுக்கு இடையில் ஒளித்து வைத்ததைப் பார்த்தேன்.

யாராவது பார்க்கிறார்களா என்று அவர் தீவிரமாக செக் செய்தார், நான் கவனிப்பதை அறியாமலேயே...

பல வருஷங்களுக்கு முன் ஸ்ரீராம் ஒரு கல்யாணக் கச்சேரி வாசித்தான். ஆரம்பித்த பிறகு கைனடிக்கில் அங்கே சென்று, எப்படி வாசிக்கிறான் என்று பார்த்துவிட்டு,அவன் வருமுன் பார்க்கிங் இருட்டில் மறைந்து கொண்டேன், Larger than life -ல் யானை ஹோர்டிங்-ன் பின் (இன்று தான் பார்த்தேன், Sony Pix -ல்) ஒளிந்து கொள்வதைப் போல. அன்று அவனுக்கு வேஷ்டி எல்லாம் வைத்துக் கொடுத்தார்கள். ஆனால் பணத்தை ஒட்டிய கவரில் வைத்து விட்டார்கள்! அவனுக்கு உள்ளே எவ்வளவு இருக்கும் என்று ஆவல், ஆனால் அங்கேயே பிரித்துப் பார்த்தால் நன்றாக இருக்காது என்று, டிவிஎஸ் 50 -ல் ஏறி விட்டான். எஸ்.ஜி.எஸ். சபாவிலிருந்து டி.நகர் மெயின் ரோடு வருவதற்குள் 3,4 முறைகள் வண்டியை நிறுத்த தோதான இடம் தேடினான்.

என் ஸ்கூட்டரின் ஹெட் லைட்டை அணைத்துவிட்டு நான் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். இப்போது GRT இருக்குமிடம் அருகே, மரத்தடியில் வண்டியை நிறுத்தி, யாருடைய கவரோ போல், சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு, பிரித்து எண்ணிய போது, சிரித்தபடி அருகில் போய் "டேய்..." என்றேன். வெட்கம், ஆச்சிரியம், மிகுந்த மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து, அண்ணா... என்றான். Love you Sriram...

கடப்பா என்று கடந்தும் காணாத கடப்பா கல், ஆதோனிக்கு அப்புறம், நரகூரில் காணக் கிடைத்தது. அடுத்து வந்த, குப்கல், பெயர் தியரிக்கு ஏற்றவாறு குப்பைகள் இன்றி, சுத்தமாகக் காணப்பட்டது.

நீண்ட தூரப் பயணங்களில் அழுக்கு ரெஸ்ட் ரூம்களைத் தவிர்க்க வேண்டி அதிகம் அருந்தாமல் விட்ட தண்ணீர், அந்த அடுக்கின் ஒவ்வொரு வலைக் கூட்டிலும் பாட்டில்களாய்த் தொங்கிக்கொண்டிருந்தது. தண்ணீருக்காகத் தவித்தபடி இருந்தது உடல். பெரும்பாலான நேரங்களில், தவிப்பைத் தான் இன்பம் என்று உணர்கிறோம். In fact, இன்ப அதிகரிப்பே தவிப்பினால் தான்.ஆனால், உடல் நீருக்கு அலைகையில், ஆழ்ந்து மூச்சுவிடத் தோன்றும். அது, மனம் ஒரு முகப்படுவதை எளிதாக்கிவிடுகிறது...

இப்போது, ஸூர்ய-காந்திப் (gandhi அல்ல, kaanthi) பூக்கள் மறைந்து, மரங்களற்ற பாறை மலைகள், கற்குன்றுகள் இரு மருங்கிலும். வேலூரை விட, கோடை கடுமையாக இருக்கும் போலிருந்தது. சிறிய கோவில் ஒன்றில் நேர்த்திக் கடனை முடித்துவிட்டு ஒரு குடும்பம் கூட்டமாகத் திரும்பிக்கொண்டிருந்தது. பக்கத்து அடுக்கிலிருந்து முக்கால் மணி நேரத்திற்கு ஒரு முறை coke வாசனை வந்தது. பெப்சியில் ஒரு ஷூ பாலீஷ் வாசனை இருக்கும்; இது coke தான்.

4-20pm: மந்த்ராலயம் ரோடு. ஒரு இரயில் நிலையத்திற்கு ஏன் ரோடு என்று பெயர்? காஞ்சிபுரத்தில் "சாலை தெரு" மாதிரி. திருவண்ணாமலை தீபத்தை பொதிகை தொலைக்காட்சியில் வர்ணித்துக் கொண்டிருந்த ஒரு "கவிஞர்" யானையைக் கண்டதும், அதோ வருகிறான் கஜமுகன் என்று கூவியதைப் போல. யானையைத் தவிர எந்த விலங்கோ மனிதனோ யானை முகத்துடன் இருந்தால் கஜமுகன் எனலாம்; யானையையே சொன்னால்!!

ஐந்து மணிக்கு இரயில் நுழைந்த ஸ்டேஷனில், ரெய்ச்சூர் என்ற பெயரை BSNL விளம்பரங்களுக்கு இடையே தேடிக் கண்டுபிடித்தேன். சட்டென நினைவு வந்து செல் போனைப் பார்த்ததில் சிக்னல் முழுதாகக் காட்டியது. கர்நாடகாவில் நுழைந்திருக்கிறாய் என்று தொ-lie -பேசி இல்லா-கா கொடுத்திருந்த (எச்சரிக்கை?) குறுஞ்செய்தியை அப்போதுதான் பார்த்தேன்.

இரயில் நிலையத்தை அடுத்திருந்த பள்ளியைப் பார்த்ததும் ஈரோடு இரயில்வே காலனி முனிசிபல் ஹையர் செகண்டரி ஸ்கூல் நினவு வந்தது. அங்கு தான் படித்தேன். அதன் மூன்றாம் மாடியின் வகுப்பறை ஜன்னல் வழியே பார்த்த இரயில்கள் ஞாபகம் வந்தன. சீராகத் (வேறு வழியின்றி) தொடரும் பெட்டிகளை இழுத்தபடி தானைத் தலைவர் எஞ்சின் அய்யா கம்பீரமாக வருவார்.அந்த இடத்தில் ஒரு வளைவும் அதன் பின்னே பெண் படுத்திருப்பது போல ஒரு மலையும் இருந்து, அக்காட்சியின் அழகை அதிகரித்தபடியிருந்தது.

வளைவுகளும் கவர்ச்சிகளும் பிரிக்கமுடியாதவை.

நடு நடுவே, கையிலிருந்த புத்தகம் (பாரதி மணியின் "பல நேரங்களில் பல மனிதர்கள்") இழுத்துக்கொண்டது. ஜன்னலுக்கு அருகில் காதை வைத்தால், வழக்கமான இரயில் சப்தத்தோடு, "ச்சுச்சுச்சுச்சு...." என்ற இரஹச்யக் குரலை கரிப்புகையுடன் எழுப்பிக்கொண்டிருந்தது தாதர். சிவராமன் சார், மிருதங்கத்தின் வலந்தலையில், கடைக்கோடியில் கையைச் செலுத்தி வாசிக்கும் அதி-மேல் கால "தகதின தகதின", தகதகதகதக போன்றவை, "ச்சகதின ச்சகதின" "ச்சக ச்சக ச்சக ச்சக " என்று கேட்பதைப் போல்.

அவர் "தரிகிடதொம்" என்று வாசிக்கும்போது (ஒரு வினாடியில் ஆறு தரிகிட சொல்ல முடிந்தால்? அந்த வேகத்திலிருக்கும், முயற்சி செய்து பாருங்களேன்...) மீட்டில் (white skin on the right side of mrudangam) வாசிப்பது நளினமாகவும், சாதத்தில் (black patch) விழும்போது கம்பீர அதட்டலாகவும், அதுவும் அந்த முறையில் வாசிக்கும்போது அவருடைய கை, ஏறக்குறைய அவர் தோள் உயரத்திலிருந்து மின்னல் போல இறங்கும். என் கண்களுக்கு, கருமேகத்திலிருந்து கீழ் வானம் வரை மின்னல் கீற்றொன்று கோடாய் இறங்குதல் போல, உயர்த்திய அவர் கைக்கும்-மிருதங்கத்திற்கும் இடையே ஒருகோடு தெரியும். அவரே, 'தோடுடைய செவியன்' என்பதைப் போல, "கோடுடைய முகத்தோனை" எப்பொழுதும் மறவா"தவர்" தானே...

அமெரிக்காவின் டெட்ராய்ட் (Michigan) நகருக்குப் போகும் வழியில் Frankfurt -ல் சில மணி நேரங்கள் காத்திருந்தேன். அங்கே, 20 நொடிகளுக்கு ஒரு முறை, ஒரு take off நிகழ்ந்துகொண்டு இருந்தது. நிலத்திலிருந்து விடுபட்டு, மேலேறும் அந்த விமானங்கள் ஒவ்வொன்றும் அவரின் வலது கை விரல்களை நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தன. "நம்" என்ற சொல்லை வாசிக்கும் போது, கை அப்படித்தான் இருக்கும்.

இரயிலின் ஜன்னலுக்கு நேரே, மலைகளுக்குப் பின்னே, நிலாத் தோழி அகன்றிருப்பாள் என்ற நம்பிக்கையில், நிலமகளை ஆரத் தழுவும் ஆவல் கொண்டு, வெளிச்சங்களை ம்ருதுவாக்கியபடி இறங்கிக்கொண்டிருந்தது விழு ஞாயிறு.

ரெய்ச்சூர் நிலையம் தாண்டி, இப்போது மீண்டும் ஸூர்ய-காந்தி மலர்கள். அனால் அவை ஒன்றும் மாலை நேரச் சூரியனைப் பார்த்து இல்லை; எதிரே எங்கள் பக்கமாய் தான் பார்த்திருந்தன. பார்க்காவிடினும், ஒருவேளை அவைகள் ஆதவனை நினைத்துக்கொண்டிருக்க கூடும். எங்கோ இருப்பினும், சிவராமன் "ஸாரை"யே "நாக"ராஜன் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல...

இப்போது மணி 5-27... கடந்த ஊர் யதலாப்பூர்...எதுலயாவது பூர்... மனம் எதிலாவது புகுந்துகொள்கிறது. அப்போது தான் உடல் மரணிக்கும் வரை, அதுவும் வாழ முடியும். மனம் செத்துப் போய் உடல் வாழ்தல் எப்படியிருக்கும்? என்றாவது அறிவோமாயிருக்கும்; அப்போது எழுதவோ பேசிக்கொள்ளவோ மாட்டோம்.

6-58 க்கு வாடியில் (ஆந்திரா)நுழைந்தது இரயில். வாடீன்னு ஒரு ஸ்டேஷனா! ஒண்ணும் இல்லை, நம்ம தமிழ்நாட்டுலேயே கிட்டவாடி, அய்யாவாடி, தோக்கவாடி எல்லாம் உண்டு. பெண்பாற் பெயர் கொண்டதை நேர் செய்யத் தானோ என்னவோ, விஜயவாடாவும் இருந்தது ஆந்திராவில். மூன்று முறை warning tone ஒலித்தது கை பேசியில், தெலுங்கு பேசியபடி... பேட்டரி-லோ...

இரவானதும் காதலர்களைத் தான் கதவைச் சாத்திக்கொள்ளச் சொல்வார்கள்; இங்கே, இரவானதும் காலதர்களைச் சாத்தச் சொன்னார்கள், குல்பர்காவிற்குப் பிறகு. ஜன்னல் ஃபிரன்ச் வார்த்தை, கால் அதர் தான் தமிழ் என்று எப்போதோ குமுதத்தில் படித்த ஞாபகம். கால் - காற்று; அதர் - வரும் வழி. The 'other' way of letting the air, even if door is closed! நானோ, வியாழன் இரவே மூடிவிட்டிருந்தேன், windowsஐ... :)

சென்ற வாரம் பொதிகையில் விஷக்கடிகளுக்கு நேரலையில் வைத்தியம் சொல்லிக்கொண்டிருந்தவரிடம் யாரோ ஒருவர் "பாம்பின் 'கால்' பாம்பறியும்" என்றால் என்ன கேட்டார். "எனக்கு பாம்புக்கடி பத்தி தான் தெரியும், பழமொழிக்கெல்லாம் அர்த்தம் கேக்காதீங்க" என்றார். தொகுத்து வழங்கிய சுபாஷினி தன் போக்கில் எதையோ சொல்லி சமாளிக்க, நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. "மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்று ஒளவையார் பாடியிருக்கிறார். குண்டலினிப் பாம்பும் காற்றெனும் மூச்சும் பிரிக்கமுடியாதவை.

சனிக்கிழமை செம்பூர் fine arts -லும் ஞாயிறன்று பொவாயில் ஒரு chamber music concert -ம். அதைப் பற்றி விவாதித்துக் கொண்டு இரவு உணவை முடித்தோம். த்யாகராஜன் (mrudangam artiste, he was also in the same train with OST) வேறு பெட்டியிலிருந்து காண வந்தார். கல்யாணக் கச்சேரிகளில் பாட்டுகள் பற்றிப் பேச்சு வந்தது.

"பேசீண்டே இருப்பா, யாராவது... திடீர்னு வந்து குறையொன்றுமில்லை பாடுங்கோன்னு கேப்பா.. கேட்டவாளே போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுடுவா... மிக்சர் சாப்டுண்டே காபி குடிக்கறா மாதிரி, குறையொன்றுமில்லை கேட்டுண்டே பேசணும் போலிருக்கு..."

"தந்தனா னா ஆகி எல்லாம் பாடச்சொல்லுவா, அது பாட்டுக்கு சண்டாள பூமின்னெல்லாம் வந்துண்டிருக்கும் அந்த பாட்டுல... பல்லடம் வெங்கட்ரமணா ராவ் ஒரு தடவ சொன்னார், யாரோ வந்து 'மோக்ஷமு கலதா' பாடச் சொன்னாளாம் கல்யாணத்துல! இப்பதான் ஏதோ செட்டில் பண்ணி பக்கத்துல உக்காந்திருப்பா, அதுக்குள்ள மோக்ஷம்னா பொண்ணும் மாப்ளையும் என்ன பண்ணுவா, பாருங்கோ...அப்புறம் கொஞ்ச நாள் பொறுத்து மாப்ள, ஏடி ஜன்மம் இதிஹான்னு பாடுவான்.."

"ஏண்ணா.. அப்படி சொல்றேள்..." என்றாள் பவா.

"ச்சே..ச்சே.. ஏதோ ஆண்கள் மட்டும் அப்படிப் பாடுவான்னு சொல்லலை... பெண்களும், மோஸ ஹோதனல்லோ, நானே மோஸ ஹோதனல்லோன்னு எசப்பாட்டு பாடலாமே," என்றேன். :P

சற்று பேசிவிட்டு, பவா தன் இருக்கைக்குக் கிளம்பினாள். I will follow, good night என்றார், த்யாகராஜன். அதற்கு அடுத்த பெட்டி தான் அவர் இருக்கை. "நல்ல பக்க வாத்யம் என்றால் பாடகாளை follow பண்ணுவா," சந்திரனிடம் திரும்பி, ஆமா... female artiste எல்லாம் எப்படி பாட-"காளைன்னு" சொல்றது என்றேன்.