Showing posts with label Viswaroopam. Show all posts
Showing posts with label Viswaroopam. Show all posts

Wednesday, January 30, 2013

Viswaroopam அளிக்கும் “நடந்தாலும் நடக்குங்கோவ்”



இனி எந்த வழக்கானாலும் நீதிபதியானவர் தான் அளிக்கப்போகும் தீர்ப்பை, அமைப்புகளிடம் காட்டி கருத்துக் கேட்ட பின்பு திருத்தி எழுதி அதைக் கோர்ட்டில் ஒட்டிவைக்கலாம்; ஊடகங்களில் வெளியிடலாம்.

பிறகு SMS ஓட்டு அடைப்படையில் தீர்ப்பை இறுதி செய்யலாம்.

அதிலும், எதிர்ப்பு ஓட்டுகளைப் பதிவு செய்தவர்கள் மனம் புண்படாமலிருக்க காலையில் அவர்கள் அக்கவுண்ட்டில் நூறோ இருநூறோ செலுத்தி மாலையில் டாஸ்மாக்கில் திரும்ப வசூலித்துக்கொள்ளலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘அமைப்புகள்’ (எந்த மதம், சங்கம், யூனியன் ஆனாலும்) சார்ந்தவர்களை அருகில் வைத்துக் கொண்டே கதை எழுதும்போதோ படமெடுக்கவோ கொலை கொள்ளையடிக்கவோ பாலியல் வன்முறையோசெய்யலாம்.

Twitter Facebook-ல் கூட முதலில் அமைப்புகளுக்கு மெயில் அனுப்பி Moderator அனுமத்தித்தால் நேரடியாக நம் அக்கவுண்ட்டில் போஸ்ட் ஆகும்படி லின்க் செட் செய்துவிடலாம்.

மூன்றே வாரங்களில் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கதை, திரைக்கதை, காவியம், புதினம், வலைப்பக்கம் எழுதுவது எப்படி என்று புத்தகம் வெளியிடலாம்.

கோர்ட்டுகளை எல்லாம் குழந்தைகள் மருத்துவம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் வாடிகளாக மாற்றிவிடலாம்.

தலைமைச் செயலகம் என்ற நாமதேயத்தை தலைமைச் செயல் அகலும் என்றோ The-Lie-My செயற்கலகம் என்றோ மாற்றிவிடலாம்.

நாற்றம் ஒன்றே.. ச்சீ.. மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது.