Sunday, June 28, 2009

பொதுத் தேர்வு ரத்து :) :)

B.Com-ஐ முடித்துவிட்டு அப்பாவின் நண்பருக்குத் தெரிந்த இடத்தில் ஏதேனும் வேலைக்குச் சேருதல் எடுபடாத காலம் இது. தான் என்னவாகப் போகிறோம் என்பதை ஒரு மாணவன்/வி
தீர்மானிக்கும் வயது குறைந்து கொண்டே வருகிறது...

"எங்க நாள்ல எல்லாம் ஒக்காரரதுக்கு பதனாறு பதனேழு வயசாச்சு... இப்போவெல்லாம் ஒம்போது பத்துலையே ஒக்காந்துடறா" என்று பாட்டிகள் அங்கலாய்ப்பது போல. (ஆமாம் இந்த கலாய்க்கறதுக்கும் அங்கலாய்க்கறதுக்கும் என்ன தொடர்பு?)

படிப்பு, அனுபவம், வசதிகள், காதல், காமம் எல்லாமே முன்தேதியிட்டு நடந்துவிடுகின்றன, அரசு அளிக்கும் சம்பள உயர்வு போல.

பத்தாவதோ ப்ளஸ்-டுவோ இரண்டிலும் விருப்பப் பாடம் தவிர மற்றவற்றையும் மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டியிருப்பதால் அவ்வருடம் முழுவதுமே, புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்று முனைப்புச் சிதறல் ஏற்படுகிறது.

எட்டாம் வகுப்பிலேயே தான் ஒரு கணிதவியல் நிபுணனாக வேண்டும் என்று ஒருவன் தீர்மானித்து விட்டாலும், தன் முழு கவனத்தையும் கணிதம், மொழியின் வளமை, யதார்த்த வாழ்க்கைக்குத் தேவையான மேலாண்மைத் தகுதிகள், நாளிதழ்களும் வலைப்பூக்களும் தரும் பொது அறிவு, விவாதப் பண்பு மற்றும் communication skills இவற்றில்ஆழமாக வைக்கலாம் என்றால், ம்ம்ஹும்...

"NACL and H2O + கொதிக்கின்ற தண்ணீர் நொதித்து வரும்போது எழுகிற புகையை ஒரு குழாயில் பிடித்து..."

"கடலைகளும் ஒதங்களும் பற்றித் தெரிந்துகொள்ள ஜெர்மெனியின் ஆராய்ச்சியாளர் நாடா மாயா கூறும்..."

"பகுபதப் பண்பிலக்கனம் என்பது ஒரு வார்த்தையின் திரிபிலிருந்து வரும் தனக்குரிய மாத்திரையில் குறைந்தொலிக்கும் குற்றியலுகரத்தை..."

நாராயணா... இதையெல்லாம் ஒரு கட்டத்தில் கழட்டிவிட்டு என்னுடைய பாடத்தில் என் முழு கவனத்தையும் வைத்து, நான் வளரும் காலத்திலேயே என் துறையும் வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்து, அதன் update-களுடன் என் அறிவையும் தேடலையும் சமன் செய்துகொண்டே என் வேலையை நான் செய்வது, offering the fullest concentration and the best of my ability என்று என் வேளையில் நிம்மதியாக ஈடுபடுகின்ற வாழ்க்கை, இவற்றுக்கு இந்த பொதுத்தேர்வு முறைகள் இடைஞ்சல் என்பது என் அபிப்பிராயம்.

கல்லூரிக்கு செல்லுமுன், ஒருவன் எந்தத் துறையை விரும்புகிறானோ அதைப் பற்றிய theoretical knowledge-ஐயேனும் வளர்த்துக் கொண்டால், முழுமையான practical knowledge அவனுக்கு கல்லூரிச் சூழலில் கிடைத்துவிடும். அப்போது, அவசர அவசரமாக நான்கு வருடங்கள் தடவுகிற விஷயங்களை அப்போது நிதானமாகவோ அல்லது தெளிவாக மூன்று வருடங்களிலேயோ படித்து விடலாம்.

எந்தத் துறை சம்பந்தப் பட்ட விஷயத்தையுமே, புரிந்துகொண்டு படிப்பதற்குப் போதுமான கால அவகாசமோ (breathing time) பொறுமையோ இன்றி குழறுவதும் குழப்புவதும் தடுக்கப்படும். மனப்பாடம் செய்து ஒப்பித்து விடுவது எளிமையான வழியாகத் தோன்றுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம். அப்போ, அதானே எல்லாரும் பண்ணுவான்?

மேலும், கலையிலோ விளையாட்டிலோ இருக்கின்ற திறமைகள் கூட சரியான முறையில் இனங்காணப்பட்டு ஊக்குவிக்கப்படாத நிலைக்கும் இது ஒரு காரணம்.

Also , Stress and anxiety, results in obesity and in a life enveloped with tension and anger. தானே விளையாடுதலில் இருக்கும் ஆனந்தம் அறியாமல் பதினொரு பேர் நாள் முழுதும் விளையாடுவதை வீட்டுப் பாடமும் அசைன்மென்ட்டும் எழுதிக்கொண்டே பார்க்கிற அவலம் என்பது, துணையிருந்தும் நீலப் படம் பார்த்து மைதுனம் செய்து மனம் பிழறும் நிலைக்கு ஒப்பானது.

மருத்துவம், சங்கீதம், மொழியிலக்கணம் போன்றவை குறித்த பொது அறிவு தான் நமக்கு இருக்கிறது. அதற்கு மேலே தேவையென்றால் கற்றுக்கொள்ளவோ குணமடையவோ அதற்குரியவரிடம் போகிறோம். அது போல, அறிவியலோ சரித்திரமோ ஏதாவது தேவை என்றால் கோழி, "பறப்பதைப்" போல தெரிந்து கொண்டுவிட்டு, எஞ்சிய நேரத்தில் கிளரும் வேலையை சரியாகச் செய்தால் வாழ்க்கை சுமுகமாகும்; குஞ்சுகளும் பிழைத்துக்கொள்ளும்.

இந்நிலையில், பொதுத் தேர்வுகள் என்று சகல பாடங்களுக்கும் செலுத்தப் படுகின்ற முனைப்பு சற்று, விருப்பப் பாடங்களின் நுழைவுத்தேர்விற்கென்று முழுவதாகப் பயன்படுத்தப்படும் சூழல் வரவேற்கத்தக்கதே.

இன்னும் சற்று நேரம் கிடைக்கும்...

எனக்கே எனக்கான
என்னுடைய வாழக்கையை
அறுபதும் ஆகியபின்

தேடலுக்கு களைத்து
தேக்கி வைத்த உணர்வுகளை
கனவில் மட்டும் கண்டு மகிழாது,

இன்றே..
இப்பொழுதே...

வாழ்தலுக்கும் வரைவதற்கும்
வாயையே திறக்காவிடினும்
வம்புகளைப் "வலை"யறுத்துப்
பூக்களைப் படிப்பதற்கும்
பதிப்பதற்கும்...

இன்னும் சற்று நேரம் கிடைக்கும்...




Saturday, June 27, 2009

நாகர்கோயில் பயணம் - 4

திரும்பி வந்ததும், நல்ல பசி. புட்டு கடலை ஆறிப் போயிருந்தாலும் வடையுடன் நன்றாக இருந்தது. தலைவலி மிகுதியானதும், காலையிலிருந்து தேநீர் அருந்தாதது நினைவிற்கு வந்தது. சற்றே குரூரமாக, வலிக்கட்டும் கொஞ்ச நேரம் என்று வலியோடிருந்தேன்... அரை மணி கழித்து, அறை மணி அடித்து டீ வந்தது.

ஆறு மணிக்கு கிருஷ்ண பவனில் வாங்கிய இட்டிலி-பூரிகளுடன் அனந்தபுரியில் ஏறினோம். எக்மோரிலிருந்து மேற்கு மாம்பலத்திற்கு இதுவரை பல தடவைகள் வந்திருப்பினும், இன்னும் ஒரு தெளிவான வழி புலப்படவில்லை!

சற்று சுற்றிவிட்டுக்
கூடடைந்த போது... வேறென்ன?
எப்போதும் போலத்தான்...

Wednesday, June 24, 2009


1. தேர்தல் நேரங்களும் feb-14thம் ஒரு விதத்தில் ஒன்று... எப்படிச் சொல்லுங்கள்..

இரண்டுமே, காதலர் தினங்கள்... (காது-அலர் தினங்கள்)


2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் முதல் முதலில் people had an awareness about inner garments?

கேரளா. அவர்களுக்குத்தான் "கோமன்" sense உண்டு.

3. பணப் பேய் என்று ஏன் சொல்கிறோம்... ?

For being paid to payee...


4. vajpayee யின் உறவினரான மருத்துவர் யார்?

வேற யார்? Dr.மாத்ருபூதம் தான். (serious ஆன பதில் எல்லாம் யோசிக்கக் கூடாது)


5. மற்ற கடவுள் பெயர்களை வெறுமே சொல்லும்போது, முருகனை மட்டும் ஏன் பழனி
ஆண்டவர், தணிகை ஆண்டவர் என்று சொல்கிறோம்?

ஏனெனில் அவர் குன்றுதோறாடும் குமரன். மலை, அதன் மீது கோபுரம்என்றிருப்பவர். ஆகையால்,

தணிகை "on tower"

செந்தில் "on tower"

பழனி "on tower".....


6. புகழ் இல்லை பெருமாளே என்றால் கீர்த்தியை அளிப்பார்....

பணம் இல்லை கோவிந்தா என வேண்டினால் செல்வம் வழங்குவார்...

குறை ஒன்றுமில்லை என்றால்?

வேணாம்... risk எடுக்காதீங்க...


7. க்ரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடுக்கும் முன்பே காலர் ஐடியைக் கண்டுபிடித்தது
யார்?

சலவைக்காரர்கள்...


8. who invented use n throw?

இந்தியர்கள் தான்... வாழை இல்லை, ஆழம்-வேலங்குச்சிகள், மனைவிகள்... :D


9. what is the single word for saying the hand rest in stair case?

"உடன்படிக்கை" (woodden)


10. what is "murattu pepsi?"

it is the next film from the unit of "சாது மிரண்டா"

11. Why tamarind trees live long?

புளியங்கா இருப்பதால்...

*************************************************

சரியான விடையளித்தவர்களுக்கு பாராட்டுக்கள். :) :)

*********************************************

கொசுறு: "டாக்டர், என் பொண்ணு மோனிகா வளரவே மாட்டேங்கறா..."

"ம்ம்... Konica-ன்னு பேர் வெய்யுங்க... Develop ஆயிடுவா"

Monday, June 22, 2009

நாகர்கோயில் பயணம் - 3
















மணக்குடியின் உடைந்த பாலத்திலிருந்து வரும் வழியில் சுசீந்தரம் கோவிலுக்கு வந்தோம். காருக்குள்ளேயே இருந்து விட்டேன். பார்க்கிங்கில் இருந்தவாறு கோபுரத்தை பார்த்தபடி ஒரு பத்து நிமிடம் இருப்போம், உடனே கிளம்பி விடலாம் என்று நினைத்தேன். படிக்கட்டுகளை ஏறி இறங்கும் மன நிலையில் நான் இல்லை. ரவியும் அருணும் இறங்கியபின், வேறு ஒரு வண்டி கிளம்புகிறது என்று சற்றே நகர்த்தி, திருப்பி நிறுத்தி இறங்கிச் சென்றார் டிரைவர். நேரே... கட்டணக் கழிப்பிடம்; பின்னால் கோபுரம்!














இரண்டு ரூபாய் என்பது பலருக்கும் மிகப் பெரிய தொகையாகவே இருந்தது. எல்லோரும் பார்க்கிங் முனையில் நிம்மதியடைந்தவாறு "இருந்தனர்".
பக்கத்தில், வெய்யிலை பொருட்படுத்தாது இரண்டு நாய்கள் கூடிக் கொண்டிருந்தன.

ஆவின் பார்லர் என்று எழுதியிருந்த இடத்தில் டீ குடிக்க எண்ணி, அந்த இடமும் அழுக்கும் பார்த்து மனம் மாறினேன். கோவிலிலிருந்து வந்ததும் ரவி, "ஈரோட் சார்... இங்க புட்டு கடலை சாப்பிட்டிருக்கேளா... ரொம்ப நன்னா இருக்கும்... இவ்ளோ தூரம் வந்துட்டு, அத சாப்டாம போனா எப்பிடி" என்றார். அஞ்சு மணீல இருந்து ஏழு மணி வரைக்கும் தான் புட்டு கிடைக்கும், அப்புறம் தீந்து போயிரும் என்ற டிரைவர் குரலைப் புறந்தள்ளி, குளத்தருகே தேடினார். அருணும் போனான். முதலில் திரும்பி வந்தது அருண்.

"மாமா, அவுரு, புட்டு இருக்கான்னு பாத்துண்டே, ஆர்ச் வரைக்கும் போய்ட்டார்... நான், ரவி சார்.. ரவி சார்னு கூப்டேன்... அவருக்குக் கேக்கல... நான் இருந்த எடத்துல பூரி சூடா இருந்துது... சரி அவர் புட்டு சாப்ட்டுட்டு வரதுக்குள்ள, இத முடிப்போம்னு பூரிய உள்ள தள்ளினேன்... வா, நம்ம அங்க போகலாம்"

ஆர்ச் அருகில் ரவி கையசைத்தார். நான் பதிலுக்கு கை காட்டியதும், நடுவில் யாரோ ஒருவர் என்னைப் பார்த்துச் சிரித்து, அவரும் கை காட்டினார். நடந்து வந்து, கடைகளில் படிக்கட்டுகளில், கையில் டீயுடன் குனிந்து காருக்குள் பார்த்து... எனக்கும் அவருக்கும் "ஸ்நானப் ப்ராப்தி" கூட இல்லை என்று தெளிந்து சென்று விட்டார்.

"டிரைவர்... இவர் யாரு?"

"தெரியல.. தலைக்கு ச்சொகமில்ல போல..."

மென்மையாக, மிகை நடிப்பற்ற, உற்று கவனித்தால் அன்றி, இதழோரக் குறுநகை தெரியாத, உள்ளே ஒளிந்த கிண்டல்.

பெய்த்தியத்துல ஒண்ணாம் நம்பர், ரெண்டுங்கெட்டான், கிறுக்குப் பய, பகல்லயே ஒரு எழவும் புரீல போலிருக்கு... என்ற தஞ்சை வாசகங்கள் இன்றி, கவிதையாய்த் தோன்றியது அந்த சொல்லாடல்.

அருகே வந்த ரவியின் கையில் இரண்டு பொட்டலங்கள். புட்டு-கடலையும் வடைகளும். ஒரு துண்டு வாயில் போட்டுக்கொண்ட வடை ஏனோ, அவ்வூரின் அபூர்வப் படைப்பு போல, மிகச் சுவையாய் இருந்தது. அங்கிருந்து தான் தொட்டிப்பாலம்.

தொட்டிப்பாலத்தில் இருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்றோம்.திங்கட்கிழமை விடுமுறை என்று எழுதியிருந்தார்கள். காரைத் திருப்பியபோது, பஸ் ஒன்று ரிவர்ஸில் வந்தது. "கைகாட்ட மாட்டீகளா... போப்பா..." என்று மென்மையாகக் கோபித்துக்கொண்டார் டிரைவர். "ஹ்ம்ம்.. இதே மெட்ராசா இருந்தா, சாவு கிராக்கி... வூட்ல சொல்லிக்கினு வந்தியா.
.. னு ஆரம்பிச்சிருப்பான்" என்றார் ரவி.

நேரே
திற்பரப்பு அருவிக்குச் சென்றோம். சரிவாக சிமென்ட் பாதையில் இறங்குகையில், பாதி வழியில் ஆண்கள் குளிக்கச் செல்லும் வழியில் என்று இடது புறம் திரும்பி மூங்கில் கைப் பிடிகளுடன் படிகள் இறங்கின.


Detroit
-ல் இருந்தபோது, மாடி ஏறுகையில் கஸ்தூரியிடம் கேட்டேன். சைடுல புடிச்சுண்டு ஏற மரத்துல hold இருக்கே, இத எப்பிடி ஒரே வார்த்தைல சொல்லுவ? "சார், இந்த வெளையாட்டுக்கு நான் வல்ல.. நீங்களே சொல்லுங்கோ..." "உடன்படிக்கை" :) :) நேராக இறங்கிய சரிவில் சென்றால் தான் அருவியருகில் நான் போகலாம். பெண்கள் செல்லும் வழியில் என்றது அறிவிப்பு. ஆனால், அறிவிப்புகளை மதித்தால் ஆபத்து வரும் என்று "தெளிவாக" காட்டியது மற்றொரு பலகை.





நான் பெண்கள் பகுதியில் இறங்கித் திரும்பியதும், ஈரம் ஆரம்பித்த முனையிலேயே நிறுத்திவிட்டேன். அதற்கு மேல் இறங்கி வழுக்கினால், bathing using liqur என்று எண்ணப்படுவேன் என்று! ஆண்கள் தான் பெண்கள் அருகில் போகக்கூடாதே தவிர, ஆண்கள் பகுதியில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள். உறவுக்கு வலியுறுத்தலும் பிறன் மனை நோக்குதலும் அவள் சம்மதித்தால் தவறில்லை என்று ஒரு விதியின் அடி நூலிழை பின்னப்பட்டுக்கொண்டிருந்தது.

அருவியில்
குளித்திருக்கலாம். ஆனால், அங்கேயே பல் தேய்த்து துப்பிக்கொண்டிருந்தனர் மக்கள். சோப்பு, ஷாம்பூ என்று, surf தவிர மற்றயவை சிதறின. அந்த அருவி, நீளமாக இருந்தது. பெண்கள் பகுதி, ஒரு சுவர்த் தடுப்பு, இரு படிகள் அளவிற்கு இறங்கினால், ஒரு பரப்பு, அங்கிருந்து இரு படிகள் இறங்கினால் சற்று நீல அகலத்துடன் ஒரு துறை, அதிலிருந்து இறங்கினால் சின்னதாய் குழந்தைகளுக்கு இயற்கை அளித்த குதூகலமாய் ஒரு சிறிய அருவி. ஆனால், அது தான் கடைசியாய் சகல தீர்த்தங்களையும் வாங்கி வழிந்து கொண்டிருந்தது. பலரும் நனையும் ஒரு அருவியில் ஒரு நீச்சல் குளத்தின் கட்டுப்பாடுகளை விதிப்பதோ, கண்காணிப்பதோ மிகக் கடினம் என்று தோன்றவில்லை. மக்கள் நாகரீகம் இழக்கும் தருணங்களில் அதைநினைவூட்டவாவது அரசு முனைய வேண்டும்.






திற்பரப்பில் இருந்து கிளம்பும்போது 11.30 மணி ஆகியிருந்தது. சாப்பிடாவிட்டாலும் பசி இல்லை.

Saturday, June 20, 2009

!!!

i was talking to a famous singer, she said, "aNNA... we can rehearse on monday... i am going to cook for you... it will not be so great... anyway you are destined to eat it"

"no probs... even krishNa paramAthmA would have undergone such experiences with the nivEdhanam offered by many devotees, had plenty of "experiences" and had issued a circular that thuLasi and a spoon of water is enough for Him"

Thursday, June 18, 2009

நாகர்கோயில் பயணம் - 2


google image of the broken bridge, maNakkudi.

மீட்டெடுக்கவியலா
மனிதர்களின்
மரண ஓலம்,

அலைகளின் பேரிரைச்சலில்

மௌனமாகவே கொள்ளப்பட்டிருக்கும்.

அழுவான் என்று
நம்பியிருந்த உறவுகள் கூட,
வயிற்றுக்குள் மண்ணடைத்து,
வருந்துதற்கு ஆளின்றி

வந்துசேர்ந்த அதிர்ச்சியில்
மாண்டதே மறந்து போகும்;
மறுஜன்மம் வெறுத்துப் போகும்.


பாலங்கள் தாங்கிக்கொண்டிருந்தாலும் மனம் கனத்தது. War Memorial -கள் நினைவில் ஆடின. கூடை கூடையாய் கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிவிடும் காய்கறிகள் போல, கொத்து கொத்தாய் உணர்வின்றி மனிதர்கள் மரித்துப் போனது துக்கமாயிருந்தது

காதுகளை வெளிமுகமாய்த் திருப்பிய காலம் தான் மனிதன் உள்ளுணர்வைத் தொலைத்ததின் ஆரம்பமாய் இருந்திருக்கும் எனத் தோன்றியது.
உள்ளே ஏற்படும் நுண்ணிய சலனங்களை, உணர்வுகளை அறியாமல் போன க்ஷணத்தை மனிதன் உணராமல் இருந்திருக்க வேண்டும்.




"போற வழியில தொட்டிப்பாலம் இருக்கு, பாக்கலாமா", என்றார் டிரைவர் சுதர்சன்.

தொட்டிப்பாலம் ஒரு தொங்கும் பாலம் என்று ரவி சொன்னார், ஆசியாவின் மிகப்பெரிய என்று சேர்த்து. ஆனால் அது தொங்கும் பாலம் அல்ல - "அதனுயரக் கால்கள்" அதைத் தாங்கிக்கொண்டிருந்தன என்று அங்கே போனதும் தெரிந்தது. (ஆளுயர என்றால் மாலை; வானுயர என்றால் மிகை! இது சௌகர்யம், உண்மையும் கூட :) )


வீல் சேர் செல்லுமளவு அகலம்,
ஒரு கிலோ மீட்டர் நீளம், இரு மருங்கும் அடர்ந்த பசுமை ஆகிய காரணங்கள் போதுமானதாக இருந்தன, நான் அதைக் கண்டதும் காதல் கொள்ள.

"அருண், இந்த canal மேல இருக்கற குறுக்குக் கட்டைல கால வெச்சு, அந்த ஓரம் போயி, அந்த மரத்துல இருக்கற காயையோ எலையையோ நீ தொடறா மாதிரி ஒரு ஃபோட்டோ எடுக்கலாமா", என்று நான் கேட்டபோது, பாலத்தின் மறுமுனையில் இருந்தோம்.

"ம்ஹும்... வழீல கார்ல தூங்கீண்டே வந்ததுனால தூங்கு மூஞ்சியா இருக்கு" என்றான்.


விதவிதமான வேடங்களில் வந்தாலும் கொண்டையை மறைக்காது, மாட்டிக்கொள்ளும் வடிவேலு போல, மரங்கள் சூழ்ந்து, சற்று தூரத்தில் மறைந்து போன ஆற்றின் பாதையை தென்னை மரங்களின் உச்சிகள் காட்டிக் கொடுத்தபடியிருந்தன. ஆற்றின் கரையில் ஆனை படுத்தாற்போல பெரியதொரு பாறை இருந்தது. அருகே போனால் ஒன்பதாம் வகுப்பில் மூன்று வருடம் தங்கிய ஏதோ ஒரு
பெண்ணை, எத்தனை பேர் காதலித்தார்கள் என்ற கல்வெட்டுகள் கண்ணில் படக்கூடும்! கரையில், முன்குளியலாய் துணி அலசிய இருபெண்களின் பின்னால், இயற்கையாய்ச் செதுக்கிய நீர் நிறைந்த பள்ளங்களில் முகங்களாய்த் தெரிந்த பாறைகள்...